சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் அதிக கன மழைக்கும்,4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றுவரை பலத்த மழை பெய்து வந்தது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே பகுதியில் நீடித்ததால் புயல் உருவாவதில் தாமதமானது. இதனால் மழையின் தீவிரம் சற்று குறைந்து பலத்த காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி
இன்று கனமழை:

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை அதிக கன மழை (ரெட் அலர்ட்):
செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கடலூர், திருவாரூர், ஆகிய 6 மாவட்டங்களில் நாளை அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை மிக கனமழை:
நாளை திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 30-ல் அதிக கன மழை (ரெட் அலர்ட்):
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் நவம்பர் 30ஆம் தேதி அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 30 மிக கனமழை:
ராணிப்பேட்டை திருவண்ணாமலை அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகை ஆகிய எட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி கனமழை:
வேலூர் திருப்பத்தூர் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் திருச்சி புதுக்கோட்டை கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}