சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் அதிக கன மழைக்கும்,4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றுவரை பலத்த மழை பெய்து வந்தது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே பகுதியில் நீடித்ததால் புயல் உருவாவதில் தாமதமானது. இதனால் மழையின் தீவிரம் சற்று குறைந்து பலத்த காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி
இன்று கனமழை:
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை அதிக கன மழை (ரெட் அலர்ட்):
செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கடலூர், திருவாரூர், ஆகிய 6 மாவட்டங்களில் நாளை அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை மிக கனமழை:
நாளை திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 30-ல் அதிக கன மழை (ரெட் அலர்ட்):
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் நவம்பர் 30ஆம் தேதி அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 30 மிக கனமழை:
ராணிப்பேட்டை திருவண்ணாமலை அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகை ஆகிய எட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி கனமழை:
வேலூர் திருப்பத்தூர் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் திருச்சி புதுக்கோட்டை கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}