புயல் சின்னம் எதிரொலி.. சென்னையில் 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை கன மழை பெய்யும்.. பிரதீப் ஜான்

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் வரும் 29ஆம் தேதி கனமழை தொடங்கி, 30ஆம் தேதி தீவிர மழையாக பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னையில் தற்போது பலத்த தரைக்காற்று வீசுகிறது. அதேசமயம் சென்னையை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக உயரத்துடன் கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன்  காணப்படுகிறது.  30 ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு வடகடலோர மாவட்டங்களில் வரும் 30-ம் தேதி அதிக கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் இன்று பகலில் குளிர்ந்த காற்று வீசும். இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவும் .பிறகு மாலை அல்லது இரவு முதல் டெல்டா முதல் சென்னை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.   


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் கனமழையாக தொடங்கி, 30 ஆம் தேதி  தீவிர மழையாக  பெய்யக்கூடும்.  அதேசமயம் புதுச்சேரி, மற்றும் கடலூர், விழுப்புரம், ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்.   


புயல் கரையை கடந்த பிறகு டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்