சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் வரும் 29ஆம் தேதி கனமழை தொடங்கி, 30ஆம் தேதி தீவிர மழையாக பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னையில் தற்போது பலத்த தரைக்காற்று வீசுகிறது. அதேசமயம் சென்னையை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக உயரத்துடன் கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. 30 ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு வடகடலோர மாவட்டங்களில் வரும் 30-ம் தேதி அதிக கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் இன்று பகலில் குளிர்ந்த காற்று வீசும். இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவும் .பிறகு மாலை அல்லது இரவு முதல் டெல்டா முதல் சென்னை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் கனமழையாக தொடங்கி, 30 ஆம் தேதி தீவிர மழையாக பெய்யக்கூடும். அதேசமயம் புதுச்சேரி, மற்றும் கடலூர், விழுப்புரம், ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்.
புயல் கரையை கடந்த பிறகு டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}