சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் வரும் 29ஆம் தேதி கனமழை தொடங்கி, 30ஆம் தேதி தீவிர மழையாக பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னையில் தற்போது பலத்த தரைக்காற்று வீசுகிறது. அதேசமயம் சென்னையை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக உயரத்துடன் கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. 30 ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு வடகடலோர மாவட்டங்களில் வரும் 30-ம் தேதி அதிக கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் இன்று பகலில் குளிர்ந்த காற்று வீசும். இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவும் .பிறகு மாலை அல்லது இரவு முதல் டெல்டா முதல் சென்னை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் கனமழையாக தொடங்கி, 30 ஆம் தேதி தீவிர மழையாக பெய்யக்கூடும். அதேசமயம் புதுச்சேரி, மற்றும் கடலூர், விழுப்புரம், ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்.
புயல் கரையை கடந்த பிறகு டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}