புயல் சின்னம் எதிரொலி.. சென்னையில் 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை கன மழை பெய்யும்.. பிரதீப் ஜான்

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் வரும் 29ஆம் தேதி கனமழை தொடங்கி, 30ஆம் தேதி தீவிர மழையாக பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னையில் தற்போது பலத்த தரைக்காற்று வீசுகிறது. அதேசமயம் சென்னையை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக உயரத்துடன் கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன்  காணப்படுகிறது.  30 ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு வடகடலோர மாவட்டங்களில் வரும் 30-ம் தேதி அதிக கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் இன்று பகலில் குளிர்ந்த காற்று வீசும். இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவும் .பிறகு மாலை அல்லது இரவு முதல் டெல்டா முதல் சென்னை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.   


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் கனமழையாக தொடங்கி, 30 ஆம் தேதி  தீவிர மழையாக  பெய்யக்கூடும்.  அதேசமயம் புதுச்சேரி, மற்றும் கடலூர், விழுப்புரம், ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்.   


புயல் கரையை கடந்த பிறகு டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்