சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தாலும் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி 100% ஆவின் பால் விநியோகிக்கப்படுவதாக ஆவின் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் பலத்த மழை பெய்து சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் இந்த ஆண்டு வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் வருகிறது. மேலும் மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அத்யாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மக்களுக்கு சிரமமின்றி அத்யாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது கன மழை பெய்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படக்கூடாது எனும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100% ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. தொடர்ந்து மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}