சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தாலும் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி 100% ஆவின் பால் விநியோகிக்கப்படுவதாக ஆவின் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் பலத்த மழை பெய்து சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் இந்த ஆண்டு வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் வருகிறது. மேலும் மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அத்யாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மக்களுக்கு சிரமமின்றி அத்யாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது கன மழை பெய்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படக்கூடாது எனும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100% ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. தொடர்ந்து மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}