ஃபெங்கல் புயல் : சென்னையில் ஆவின் பால் தடையின்றி வழங்க ஏற்பாடு

Nov 30, 2024,11:47 AM IST

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தாலும் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி 100% ஆவின் பால் விநியோகிக்கப்படுவதாக ஆவின்  நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் பலத்த மழை பெய்து சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் இந்த ஆண்டு வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் வருகிறது. மேலும் மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 




இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அத்யாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மக்களுக்கு சிரமமின்றி அத்யாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது  கன மழை பெய்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படக்கூடாது எனும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.


அதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100% ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. தொடர்ந்து மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!

news

கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது

news

விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!

news

மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

news

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்