சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது சென்னையில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை முதலே விமானங்கள் தரை இறங்குவதிலும் விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் ஓடுபாதை சரி இருந்தால் மட்டுமே விமானங்களை தரையிறக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வானிலை கடும் மோசமாக நிலவி வருகிறது. அதேசமயம் பலத்த காற்றும் வீசி வருகிறது. இடைவிடாமல் கன மழை பெய்து வருவதால் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கி விமானம் இயக்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னையிலிருந்து கிளம்பும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த பிறகும் ,வானிலை சீரான பிறகும் தான் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Vaiko gets angry: ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?
அதிமுக.,வில் இபிஎஸ் தரும் பதவியை ஏற்க மாட்டேன்: எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
அதிமுகவிலிருந்து விலகி.. தவெக.வில் இணையும் 2 விஜயபாஸ்கர்கள்...அடுத்து என்ன நடக்கும்?
அதிமுக.,வில் இருந்து விலகுகிறேன்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு
வாட்ஸ்அப்பில் இனி மொபைல் எண்கள் தேவையில்லை! வந்தது புதிய வசதி
அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: திடீரென வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு
அதிமுக.,வில் மீண்டும் பரபரப்பு: இபிஎஸ் கூட்டத்தை புறக்கணிக்க வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் முடிவு?
முதல்வர் விஜய் தலைமையிலான.. தவெக அரசு கவிழ வாய்ப்பே இல்லை : திருமாவளவன் உறுதி
{{comments.comment}}