சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது சென்னையில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை முதலே விமானங்கள் தரை இறங்குவதிலும் விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் ஓடுபாதை சரி இருந்தால் மட்டுமே விமானங்களை தரையிறக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வானிலை கடும் மோசமாக நிலவி வருகிறது. அதேசமயம் பலத்த காற்றும் வீசி வருகிறது. இடைவிடாமல் கன மழை பெய்து வருவதால் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கி விமானம் இயக்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னையிலிருந்து கிளம்பும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த பிறகும் ,வானிலை சீரான பிறகும் தான் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
If someone's willing to be with you at your lowest.. வெற்றியை அவர்களுடன் கொண்டாடு!
If you are looking for a friend faultless.. நண்பர்களே மிச்சம் இருக்க மாட்டார்கள்!
S Sripriya Short Story: நன்றி மறப்பது நன்றன்று!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
கடையே கலகலவென சிரித்தது .. விஷாலின் விளையாட்டுக்கள் (16)
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
கோவிலுக்குத் திரும்பினார் அழகர்.. மதுரை சித்திரை திருவிழா நிறைவு
உயிர்களை காக்கும் வீரர்களுக்கு மரியாதை!
A Thomas Poem: உழவு!
{{comments.comment}}