இன்னும் சில மணி நேரத்தில் கரையைக் கடக்கிறது மிச்ஜாங் புயல் : வானிலை மையம்

Dec 05, 2023,02:43 PM IST
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிச்ஜாங் புயல் அடுத்த சில மணி நேரங்களில் தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவத்துள்ளது.

சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த அடர்ந்த காற்றழுத்த பகுதி மிச்ஜாம் புயலாக மாறியது. மிச்ஜாம் புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கன மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை பெய்தது. இந்த பேய் மழையால் கடந்த 2 நாட்களாக சென்னை வாசிகள் தவித்து வந்தனர். இந்த புயல் இன்று ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மழையின் தாக்கம் குறைந்தது.

 இந்நிலையில், 12 கிலோமீட்டர் வேகத்தில் காலையிலிருந்து புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா காவாலியில் இருந்து 40 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மிச்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  நெல்லூர், பாபட்லாவில் கனத்த மழை பெய்தது. 



ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதாகவும் மிச்ஜாங்ம் புயல் இன்று பிற்பகல் ஆந்திராவின் பாபட்லாவில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்