இன்னும் சில மணி நேரத்தில் கரையைக் கடக்கிறது மிச்ஜாங் புயல் : வானிலை மையம்

Dec 05, 2023,02:43 PM IST
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிச்ஜாங் புயல் அடுத்த சில மணி நேரங்களில் தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவத்துள்ளது.

சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த அடர்ந்த காற்றழுத்த பகுதி மிச்ஜாம் புயலாக மாறியது. மிச்ஜாம் புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கன மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை பெய்தது. இந்த பேய் மழையால் கடந்த 2 நாட்களாக சென்னை வாசிகள் தவித்து வந்தனர். இந்த புயல் இன்று ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மழையின் தாக்கம் குறைந்தது.

 இந்நிலையில், 12 கிலோமீட்டர் வேகத்தில் காலையிலிருந்து புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா காவாலியில் இருந்து 40 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மிச்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  நெல்லூர், பாபட்லாவில் கனத்த மழை பெய்தது. 



ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதாகவும் மிச்ஜாங்ம் புயல் இன்று பிற்பகல் ஆந்திராவின் பாபட்லாவில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்