சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு சென்யார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலானது, 24 மணி நேரம் வரை புயலாகவே நீடிக்கும் என்றும், அதன் பிறகு இது வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மலேசியா அருகே, மலாக்கா நீரிணைப் பகுதியில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு சென்யார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயலானது, தோராயமாக வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 614 கடல் மைல் தொலைவில் அமைந்திருந்தது. இது கடந்த ஆறு மணி நேரத்தில் 07 நாட்டிகல் மைல் என்ற வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதேபோல இலங்கையின் கொழும்புக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 200 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.
இந்தப் புயலானது 24 மணி நேரம் புயலாக நீடிக்கும் என்றும் அதன் பிறகு வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழ்நாட்டுக்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!
அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!
கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி
தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!
India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!
இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!
ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!
பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!
{{comments.comment}}