- சிவ.ஆ. மலர்விழி ராஜா
மார்கழி திங்கள் பிறந்ததம்மா....
மாதவன் வருகின்ற
நேரமம்மா.......
மாலவன் திருவடி
பாருமம்மா......
விடிவெள்ளி
வானில் வருமுன்னே.....
விரும்பிய நாயகன்
கரம் பற்ற.....
கனவும் நனவாகிட
துயில் களைந்து......
ஆதவன்
வருமுன்னே
நீராடி நீறிட்டு.......
வாசலில்
மாக்கோலம்
மனதினிலே
மங்கையிவள் மணக்கோலம்.......

குத்து விளக்கேற்றி
குலதெய்வமதை
அழைத்து
மலர்ச்சரங்கள்
மாலையிட்டு.......
மஞ்சள் குங்குமம்
மணக்க.....
மல்லிகை பூ கணக்க
கூந்தலில்
அள்ளி முடிக்க...
தேவர்கள்
வாழ்த்துரைக்க......
மார்கழியில் மதுர
கீதம் பாடி......
நலம் தரும் நாரணன்
நாமம் நெஞ்சினிக்க......
தெருவெல்லாம்
தெய்வீகம்......
மங்கையரின்
மகிழ்ச்சி
வெள்ளம்......

பூரண கும்பம் வைத்து
பூபாளம்
பாடிடுவோம்.....!
(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}