- சிவ.ஆ. மலர்விழி ராஜா
மார்கழி திங்கள் பிறந்ததம்மா....
மாதவன் வருகின்ற
நேரமம்மா.......
மாலவன் திருவடி
பாருமம்மா......
விடிவெள்ளி
வானில் வருமுன்னே.....
விரும்பிய நாயகன்
கரம் பற்ற.....
கனவும் நனவாகிட
துயில் களைந்து......
ஆதவன்
வருமுன்னே
நீராடி நீறிட்டு.......
வாசலில்
மாக்கோலம்
மனதினிலே
மங்கையிவள் மணக்கோலம்.......

குத்து விளக்கேற்றி
குலதெய்வமதை
அழைத்து
மலர்ச்சரங்கள்
மாலையிட்டு.......
மஞ்சள் குங்குமம்
மணக்க.....
மல்லிகை பூ கணக்க
கூந்தலில்
அள்ளி முடிக்க...
தேவர்கள்
வாழ்த்துரைக்க......
மார்கழியில் மதுர
கீதம் பாடி......
நலம் தரும் நாரணன்
நாமம் நெஞ்சினிக்க......
தெருவெல்லாம்
தெய்வீகம்......
மங்கையரின்
மகிழ்ச்சி
வெள்ளம்......

பூரண கும்பம் வைத்து
பூபாளம்
பாடிடுவோம்.....!
(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}