ஆனந்த்: குஜராத்தில் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பீரா பாலம் இடிந்து விழுந்ததில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது திடீர் என கம்பீரா பாலத்தின் நடு பகுதி மட்டும் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. பாலம் இடிந்த நேரத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி, இரண்டு வேன் மற்றும் ஒரு ஆட்டோ ஆகிய வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தது. அந்த வாகனங்களில் இருந்தவர்களை ஆற்று நீர் ஆடித்துச் சென்றது. மேலும், பாலத்தில் ஒரு டேங்கர் லாரி கீழே விழும் வகையில் தொங்கிக் கொண்டு இருந்தது.

இந்த சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், போலீசார், பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரோடு மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மேம்பாலம் கட்டப்பட்டு 43 ஆண்டுகள் ஆகின்றன.கடந்த ஆண்டு தான் மேம்பாலம் பழுது பார்க்கப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து குஜராத் சுகாதார துறை அமைச்சர் ரிதிகேஷ் படேல் பேசுகையில், மஹி ஆற்றில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் வரை வீழ்ந்துள்ளன. மத்திய குஜராத் மற்றும் செளராஷ்டிராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் ஒரு ஸ்லாப் விழுந்ததால் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}