சென்னை: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நாளை மாலை வலுவிழுந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வானிலை ஆய்வாளர்களை தொடர்ந்து குழப்பியபடி உள்ளது. அது மிகப் பெரிய புயலாக உருவெடுக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் இலங்கைக் கரையைத் தாண்டத் தொடங்கியபோது அது அப்படியே நின்று விட்டது. மேலும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக புயல் சின்னமானது தொடர்ந்து நகர முடியாமல் இருந்தது. இதனால் இது புயலாக மாறுமா என்ற குழப்பமும் ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் தற்போது இது புயலாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. திரிகோணமலையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டனத்துற்கு 340 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 470 கிலோமீட்டர் தூரத்திலும் இது நிலை கொண்டுள்ளது.
இதே வேகத்துடன் 29ம் தேதி காலை வரை தொடர்ந்து இது நகர்ந்து வரும். அதன் பிறகு வட மேற்கில் வலுவிழந்து 29ம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் மாறும். தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கரைப் பகுதிகளில் குறிப்பாக காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நவம்பர் 30ம் தேதி காலை இது கரையைக் கடக்கும்.
புயல் சின்னம் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரையிலும், இடை இடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புயல் அபாயம் நீங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}