சென்னை: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நாளை மாலை வலுவிழுந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வானிலை ஆய்வாளர்களை தொடர்ந்து குழப்பியபடி உள்ளது. அது மிகப் பெரிய புயலாக உருவெடுக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் இலங்கைக் கரையைத் தாண்டத் தொடங்கியபோது அது அப்படியே நின்று விட்டது. மேலும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக புயல் சின்னமானது தொடர்ந்து நகர முடியாமல் இருந்தது. இதனால் இது புயலாக மாறுமா என்ற குழப்பமும் ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் தற்போது இது புயலாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. திரிகோணமலையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டனத்துற்கு 340 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 470 கிலோமீட்டர் தூரத்திலும் இது நிலை கொண்டுள்ளது.
இதே வேகத்துடன் 29ம் தேதி காலை வரை தொடர்ந்து இது நகர்ந்து வரும். அதன் பிறகு வட மேற்கில் வலுவிழந்து 29ம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் மாறும். தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கரைப் பகுதிகளில் குறிப்பாக காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நவம்பர் 30ம் தேதி காலை இது கரையைக் கடக்கும்.
புயல் சின்னம் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரையிலும், இடை இடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புயல் அபாயம் நீங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}