காதல்!

Sep 16, 2025,04:17 PM IST
- தீபா ராமானுஜம்

கண்களை மூடி கனவினில் மிதக்க வைக்கும்...
கூட்டத்தை தவிர்த்து தனிமையில் ரசிக்க வைக்கும்...

தன் பிம்பம் பட்டு பட்டே கண்ணாடி தேயும்...
தானாகவே களிப்பு வந்து சேரும்...

கண்களில் மின்னல்கள் அடிக்கடி தோன்றும்...
கண்ணாடி வளையல்கள் சங்கீதம் பாடும்...

உடுத்தும் ஆடையில் உன்னதம் சேரும்...
வைக்கும் பொட்டிலும் வண்ணங்கள் கூடும்...



இன்னிசையில் மயங்கும் இயற்கையை ரசிக்கும்...
இதயத்தின் சத்தம் இன்பமாய் கேட்கும்...

சந்தனக் காற்று உயிரை வருடும்...
ஜன்னல்கள் சொர்க்கத்தின் வாயிலாய தோன்றும்...

கல்லூரி நுழைவாயில் கற்கண்டாய் இனிக்கும்...
கருத்தான பாடங்கள் கதைகளாய் தோன்றும்...

புத்தகங்களைத் திறந்தால் கவிதைகள் தெரியும்...
பூவின் காதுகளில் மனம் ரகசியம் பேசும்...

அற்பங்கள் எல்லாம் அதிசயமாய் தோன்றும்...
ஆண்டு விடுமுறை வேம்பாய் கசக்கும்...

காதல் வந்தால் மனம் அழகாக ஆகும்...
கனவுகள் எல்லாம் நிஜமாக மாறும்...!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்