காதல்!

Sep 16, 2025,04:17 PM IST
- தீபா ராமானுஜம்

கண்களை மூடி கனவினில் மிதக்க வைக்கும்...
கூட்டத்தை தவிர்த்து தனிமையில் ரசிக்க வைக்கும்...

தன் பிம்பம் பட்டு பட்டே கண்ணாடி தேயும்...
தானாகவே களிப்பு வந்து சேரும்...

கண்களில் மின்னல்கள் அடிக்கடி தோன்றும்...
கண்ணாடி வளையல்கள் சங்கீதம் பாடும்...

உடுத்தும் ஆடையில் உன்னதம் சேரும்...
வைக்கும் பொட்டிலும் வண்ணங்கள் கூடும்...



இன்னிசையில் மயங்கும் இயற்கையை ரசிக்கும்...
இதயத்தின் சத்தம் இன்பமாய் கேட்கும்...

சந்தனக் காற்று உயிரை வருடும்...
ஜன்னல்கள் சொர்க்கத்தின் வாயிலாய தோன்றும்...

கல்லூரி நுழைவாயில் கற்கண்டாய் இனிக்கும்...
கருத்தான பாடங்கள் கதைகளாய் தோன்றும்...

புத்தகங்களைத் திறந்தால் கவிதைகள் தெரியும்...
பூவின் காதுகளில் மனம் ரகசியம் பேசும்...

அற்பங்கள் எல்லாம் அதிசயமாய் தோன்றும்...
ஆண்டு விடுமுறை வேம்பாய் கசக்கும்...

காதல் வந்தால் மனம் அழகாக ஆகும்...
கனவுகள் எல்லாம் நிஜமாக மாறும்...!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

news

சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்

news

ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

news

100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்