காதல்!

Sep 16, 2025,04:17 PM IST
- தீபா ராமானுஜம்

கண்களை மூடி கனவினில் மிதக்க வைக்கும்...
கூட்டத்தை தவிர்த்து தனிமையில் ரசிக்க வைக்கும்...

தன் பிம்பம் பட்டு பட்டே கண்ணாடி தேயும்...
தானாகவே களிப்பு வந்து சேரும்...

கண்களில் மின்னல்கள் அடிக்கடி தோன்றும்...
கண்ணாடி வளையல்கள் சங்கீதம் பாடும்...

உடுத்தும் ஆடையில் உன்னதம் சேரும்...
வைக்கும் பொட்டிலும் வண்ணங்கள் கூடும்...



இன்னிசையில் மயங்கும் இயற்கையை ரசிக்கும்...
இதயத்தின் சத்தம் இன்பமாய் கேட்கும்...

சந்தனக் காற்று உயிரை வருடும்...
ஜன்னல்கள் சொர்க்கத்தின் வாயிலாய தோன்றும்...

கல்லூரி நுழைவாயில் கற்கண்டாய் இனிக்கும்...
கருத்தான பாடங்கள் கதைகளாய் தோன்றும்...

புத்தகங்களைத் திறந்தால் கவிதைகள் தெரியும்...
பூவின் காதுகளில் மனம் ரகசியம் பேசும்...

அற்பங்கள் எல்லாம் அதிசயமாய் தோன்றும்...
ஆண்டு விடுமுறை வேம்பாய் கசக்கும்...

காதல் வந்தால் மனம் அழகாக ஆகும்...
கனவுகள் எல்லாம் நிஜமாக மாறும்...!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்