காதல்!

Sep 16, 2025,04:17 PM IST
- தீபா ராமானுஜம்

கண்களை மூடி கனவினில் மிதக்க வைக்கும்...
கூட்டத்தை தவிர்த்து தனிமையில் ரசிக்க வைக்கும்...

தன் பிம்பம் பட்டு பட்டே கண்ணாடி தேயும்...
தானாகவே களிப்பு வந்து சேரும்...

கண்களில் மின்னல்கள் அடிக்கடி தோன்றும்...
கண்ணாடி வளையல்கள் சங்கீதம் பாடும்...

உடுத்தும் ஆடையில் உன்னதம் சேரும்...
வைக்கும் பொட்டிலும் வண்ணங்கள் கூடும்...



இன்னிசையில் மயங்கும் இயற்கையை ரசிக்கும்...
இதயத்தின் சத்தம் இன்பமாய் கேட்கும்...

சந்தனக் காற்று உயிரை வருடும்...
ஜன்னல்கள் சொர்க்கத்தின் வாயிலாய தோன்றும்...

கல்லூரி நுழைவாயில் கற்கண்டாய் இனிக்கும்...
கருத்தான பாடங்கள் கதைகளாய் தோன்றும்...

புத்தகங்களைத் திறந்தால் கவிதைகள் தெரியும்...
பூவின் காதுகளில் மனம் ரகசியம் பேசும்...

அற்பங்கள் எல்லாம் அதிசயமாய் தோன்றும்...
ஆண்டு விடுமுறை வேம்பாய் கசக்கும்...

காதல் வந்தால் மனம் அழகாக ஆகும்...
கனவுகள் எல்லாம் நிஜமாக மாறும்...!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்

news

அது துணியல்ல... உன் நம்பிக்கையின் ஆகாயம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

news

ராகுல் காந்தி சென்னை வருகை: காங்கிரஸ் உற்சாக வரவேற்பு

news

தமிழ்நாட்டில் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : 33 கேள்விகள் கேட்கப்படும்

news

150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்குத் திரும்பிய அரிய புத்தகம்,பட் அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

அதிகம் பார்க்கும் செய்திகள்