- ஔவை அ.ர.தீபாரவி
கற்பனை
வானின்
கட்டுக்கு
அடங்காத
ஊற்று
ஒட்டுமொத்த
ஒப்பனைச்
சொற்கள்
அசைந்தாடும்
கீற்று
அகக்
கடலில்
போடப்படும்
தூண்டில்
கொக்கி

சிந்திக்க
வைத்துச்
சிறகடிக்கச்
செய்யும்
சிற்பி
உணர்வுகள்
யாவையும்
கொட்டித்
தீர்க்கும்
வடிகால்
விழிகள்
ஊடுருவ
மனத்தில்
ஏற்படும்
கிளர்ச்சி
கருத்தை
நனி
சொட்டச்
சொல்லும்
ஓராயிரம்
நினைவுகள்
சுமக்கும்
பேசாத
காவியம்
சொற்களைச்
செதுக்கிச்
சிலை
செய்யும்
ஓவியம்
கனவுகளைக் கட்டவிழ்க்கும்
கைவிரல்
நெய்யும்
பாவியம்
(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று புதுக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}