Deepa Ravi Poem: கவிதையென்பது!

Apr 13, 2026,05:00 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி 


கற்பனை 

வானின்

கட்டுக்கு

அடங்காத  

ஊற்று


ஒட்டுமொத்த  

ஒப்பனைச்  

சொற்கள்  

அசைந்தாடும்

கீற்று


அகக் 

கடலில்

போடப்படும்

தூண்டில்

கொக்கி




சிந்திக்க 

வைத்துச்

சிறகடிக்கச்  

செய்யும் 

சிற்பி


உணர்வுகள்

யாவையும் 

கொட்டித் 

தீர்க்கும் 

வடிகால்


விழிகள் 

ஊடுருவ 

மனத்தில்

ஏற்படும் 

கிளர்ச்சி


கருத்தை 

நனி

சொட்டச்

சொல்லும்

மலர்ச்சி


ஓராயிரம்  

நினைவுகள்

சுமக்கும் 

பேசாத

காவியம்


சொற்களைச்

செதுக்கிச் 

சிலை

செய்யும்

ஓவியம்


கனவுகளைக் கட்டவிழ்க்கும் 

கைவிரல்

நெய்யும் 

பாவியம்


(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று புதுக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி

news

"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!

news

"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

news

யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

news

Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??

அதிகம் பார்க்கும் செய்திகள்