அன்பெனும் குடைக்குள் அகப்படும் மனமே!

Apr 16, 2026,12:49 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


அப்பா 

என்றால்

அகிலமும்  

அடங்கும்


அன்பைக்

கொட்டித்

தீர்க்கும் 

அடித்தளம்


பெண்  

பிள்ளையைப்

பெற்ற

பெருமிதம்


பெற்றவளின் 

சாயலைக் 

கண்டு

மகிழும்


வாழ்வின் 

பொருளை

எண்ணித்

திளைக்கும்




முகத்தில்

சிரிப்பைக்

கண்டு

மலரும்


உழைப்பின் 

களைப்பு

ஓடி

ஒளியும்


விரல் 

பிடியில்

துணிவது

பிறக்கும்


வளர்ந்தாலும்

தந்தைக்கு

மகளதிகாரம்

பிடிக்கும்


பொறுமையின்

இலக்கணமாய்

பூலோகம் 

அறியும்


இருக்கும் 

போது

புரியாத 

விளக்கம்


இழந்த

பின்பே

அத்தனையும் 

விளங்கும்


யாவரும் 

திறக்க

மறந்த

புத்தகம்


காலத்தால்

வடிக்க

இயலாத

காவியம்


கண்களில்

நிறைந்தே

இருக்கும் 

ஓவியம்


(கவித்துளி சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்