அன்பெனும் குடைக்குள் அகப்படும் மனமே!

Apr 16, 2026,12:49 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


அப்பா 

என்றால்

அகிலமும்  

அடங்கும்


அன்பைக்

கொட்டித்

தீர்க்கும் 

அடித்தளம்


பெண்  

பிள்ளையைப்

பெற்ற

பெருமிதம்


பெற்றவளின் 

சாயலைக் 

கண்டு

மகிழும்


வாழ்வின் 

பொருளை

எண்ணித்

திளைக்கும்




முகத்தில்

சிரிப்பைக்

கண்டு

மலரும்


உழைப்பின் 

களைப்பு

ஓடி

ஒளியும்


விரல் 

பிடியில்

துணிவது

பிறக்கும்


வளர்ந்தாலும்

தந்தைக்கு

மகளதிகாரம்

பிடிக்கும்


பொறுமையின்

இலக்கணமாய்

பூலோகம் 

அறியும்


இருக்கும் 

போது

புரியாத 

விளக்கம்


இழந்த

பின்பே

அத்தனையும் 

விளங்கும்


யாவரும் 

திறக்க

மறந்த

புத்தகம்


காலத்தால்

வடிக்க

இயலாத

காவியம்


கண்களில்

நிறைந்தே

இருக்கும் 

ஓவியம்


(கவித்துளி சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்