- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தீபாவளிக்கு பலகாரம் சாப்பிடுவதை விட அதை செஞ்சு ரெடி பண்றதுதான் பெரிய வேலை. ஸ்வீட் பண்ணியாச்சுன்னா, அதுக்கேத்த மாதிரி காரத்தையும் ரெடி பண்ணனும்.. அப்பதானே வீட்ல இருக்கிறவங்க பேலன்ஸ்டா சாப்பிட முடியும்.. அதுக்குத்தான் உங்களுக்காவே சூப்பரான ஒரு காரம் ரெசிப்பியுடன் வந்திருக்கோம்.
ரிப்பன் பூண்டு பக்கோடா செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. இல்லாட்டி செஞ்சு பாருங்க.. சூப்பரா இருக்கும் சாப்பிட. சிம்பிளான தயாரிப்பு முறைதான் இதுக்குத் தேவைப்படும். வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 2 கப்
வர மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
பொட்டுக்கடலை - 2 கப்
ஓமம், எள் - தலா 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
* இட்லி அரிசியை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து, வர மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அரிசி கலவையுடன் பொட்டுக் கடலை மாவு, அரை கப் காய்ச்சிய எண்ணெய் ஊற்றி, ஓமம், எள், சீரகம் தேவைக்கு ஏற்ப சேர்த்து பிசைய வேண்டும்.
* முறுக்கு அச்சில் கலவையை வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் பிழிந்து விடவும்.
* நன்கு வெந்து, எண்ணெய் கொதி அடங்கியதும் பக்கோடாவை ஜல்லிக் கரண்டியால் எண்ணெய்யை வடித்து எடுக்க வேண்டும்.
* மொறு மொறு ரிப்பன் பக்கோடா ரெடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}