- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தீபாவளிக்கு பலகாரம் சாப்பிடுவதை விட அதை செஞ்சு ரெடி பண்றதுதான் பெரிய வேலை. ஸ்வீட் பண்ணியாச்சுன்னா, அதுக்கேத்த மாதிரி காரத்தையும் ரெடி பண்ணனும்.. அப்பதானே வீட்ல இருக்கிறவங்க பேலன்ஸ்டா சாப்பிட முடியும்.. அதுக்குத்தான் உங்களுக்காவே சூப்பரான ஒரு காரம் ரெசிப்பியுடன் வந்திருக்கோம்.
ரிப்பன் பூண்டு பக்கோடா செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. இல்லாட்டி செஞ்சு பாருங்க.. சூப்பரா இருக்கும் சாப்பிட. சிம்பிளான தயாரிப்பு முறைதான் இதுக்குத் தேவைப்படும். வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 2 கப்
வர மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
பொட்டுக்கடலை - 2 கப்
ஓமம், எள் - தலா 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
* இட்லி அரிசியை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து, வர மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அரிசி கலவையுடன் பொட்டுக் கடலை மாவு, அரை கப் காய்ச்சிய எண்ணெய் ஊற்றி, ஓமம், எள், சீரகம் தேவைக்கு ஏற்ப சேர்த்து பிசைய வேண்டும்.
* முறுக்கு அச்சில் கலவையை வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் பிழிந்து விடவும்.
* நன்கு வெந்து, எண்ணெய் கொதி அடங்கியதும் பக்கோடாவை ஜல்லிக் கரண்டியால் எண்ணெய்யை வடித்து எடுக்க வேண்டும்.
* மொறு மொறு ரிப்பன் பக்கோடா ரெடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}