டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பரபரப்படைந்தனர்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 5.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குக் கீழே 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தை மக்கள் நன்றாக உணர முடிந்தது. அதேசமயம், எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. துர்காபாய் தேஷ்முக் கல்லூரி அருகே நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒரு ஏரி உள்ளது. கடந்த 3 வருடங்களாகவே இந்தப் பகுதியில் அவ்வப்போது லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதிக அளவு என்றால் கடந்த 2015ம் ஆண்டில் இங்கு 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இப்போது அதை விட அதிக அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அதிர்வை உணர்ந்த பிரதமர் மோடி

இந்த நிலநடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியே டிவீட் போட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டெல்லி மற்றும் சுற்று வட்டாரங்களில் நில அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அமைதியாகவும், உரிய முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உஷாராகவே இருங்கள். அதிகாரிகள் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
முன்னாள் டெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்டோரும் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளனர். டெல்லி காவல்துறை மக்கள் அமைதியுடன் இருக்குமாறும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}