டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பரபரப்படைந்தனர்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 5.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குக் கீழே 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தை மக்கள் நன்றாக உணர முடிந்தது. அதேசமயம், எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. துர்காபாய் தேஷ்முக் கல்லூரி அருகே நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒரு ஏரி உள்ளது. கடந்த 3 வருடங்களாகவே இந்தப் பகுதியில் அவ்வப்போது லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதிக அளவு என்றால் கடந்த 2015ம் ஆண்டில் இங்கு 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இப்போது அதை விட அதிக அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அதிர்வை உணர்ந்த பிரதமர் மோடி

இந்த நிலநடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியே டிவீட் போட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டெல்லி மற்றும் சுற்று வட்டாரங்களில் நில அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அமைதியாகவும், உரிய முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உஷாராகவே இருங்கள். அதிகாரிகள் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
முன்னாள் டெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்டோரும் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளனர். டெல்லி காவல்துறை மக்கள் அமைதியுடன் இருக்குமாறும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!
Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!
Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!
Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
{{comments.comment}}