டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பரபரப்படைந்தனர்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 5.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குக் கீழே 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தை மக்கள் நன்றாக உணர முடிந்தது. அதேசமயம், எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. துர்காபாய் தேஷ்முக் கல்லூரி அருகே நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒரு ஏரி உள்ளது. கடந்த 3 வருடங்களாகவே இந்தப் பகுதியில் அவ்வப்போது லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதிக அளவு என்றால் கடந்த 2015ம் ஆண்டில் இங்கு 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இப்போது அதை விட அதிக அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அதிர்வை உணர்ந்த பிரதமர் மோடி
இந்த நிலநடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியே டிவீட் போட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டெல்லி மற்றும் சுற்று வட்டாரங்களில் நில அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அமைதியாகவும், உரிய முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உஷாராகவே இருங்கள். அதிகாரிகள் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
முன்னாள் டெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்டோரும் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளனர். டெல்லி காவல்துறை மக்கள் அமைதியுடன் இருக்குமாறும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}