டெல்லி: டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் மாற்றியுள்ளனர். ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பான தகவலை அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஏ. சூர்ய பிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்பட்டவருமான ஜவஹர்லால் நேரு நினைவாக டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகம் சர்வதேச அளவில் பிரபலமானது. இந்த அருங்காட்சியகத்தின் பெயரை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்திருப்பதாக அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் சூர்யபிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி அது பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
{{comments.comment}}