டெல்லி நேரு அருங்காட்சியகத்தின் பெயர் அதிரடி மாற்றம்!

Aug 16, 2023,12:02 PM IST

டெல்லி: டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் மாற்றியுள்ளனர். ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.


இதுதொடர்பான தகவலை அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஏ. சூர்ய பிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்பட்டவருமான ஜவஹர்லால் நேரு நினைவாக டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகம் சர்வதேச அளவில் பிரபலமானது. இந்த அருங்காட்சியகத்தின் பெயரை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது.


ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்திருப்பதாக அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் சூர்யபிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி அது பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்