டெல்லி : டெல்லி அவசரச்சட்ட மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு மேலும் ஒரு ஆதரவு கிடைத்துள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவைத் தொடர்ந்து , தற்போது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும் பாஜக.,விற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
டெல்லி மாநிலத்தின் ஆட்சி அதிகாரம், அதிகாரிகள் நியமனம், அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுப்ரீம் கோர்ட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அந்த சட்டத்தில் சிறிது மாற்றம் கொண்டு வந்து, அந்த திருத்தப்பட்ட அவசர சட்ட மசோதாவை சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்த அவரச சட்டத்தை நிறைவேற்ற விடக் கூடாது என ஆம்ஆத்மி கட்சி கடுமையாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை அரவிந்த் கெஜ்ரிவால் நாடி உள்ளார். பாஜக.,விற்கு எதிராக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியான இ-ந்-தி-யா., சார்பில் பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது ஒரு புறம் இருந்தாலும் பாஜக.,விற்கு லோக்சபாவில் பலம் அதிகம் என்பதால் அங்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெற்று விடும். ஆனால் 245 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பாஜவிற்கு 103 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ராஜ்யசபாவில் 7 இடங்கள் காலியாக வேறு உள்ளன. இதற்கிடையே ராஜ்யசபாவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் 120 உறுப்பினர்களின் ஓட்டு பாஜக.,விற்கு தேவை. ஏற்கனவே ராஜ்யசபாவில் 9 உறுப்பினர்களையும், லோக்சபாவில் 22 உறுப்பினர்களையும் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இதனால் பாஜக.,வின் பலம் 112 ஆக உயர்ந்திருந்தது.
இந்நிலையில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும் டில்லி அவசர சட்ட விவகாரத்தில் பாஜக.,விற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர 5 நியமன எம்பி.,க்கள், ஒரு சுயயேட்சை எம்பி.,யும் பாஜக.,விற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளதால், பெரும்பான்மையை விட அதிக பலத்தை பாஜக பெற்று விட்டது. இது தவிர சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியோரும் டில்லி அவரச சட்ட விவகாரத்தில் பாஜக.,விற்கு ஆதரவு தர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}