டெல்லி: ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்க ஹிந்தி நடிகை பூனம் பாண்டேவுக்கு பாஜக கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நஷா என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமாவனர் நடிகை பூனம் பாண்டே. மாடலிங் துறையில் பிரபலமான இவர் ஹிந்தி, கன்னடா, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். அதுமட்டும் இன்றி, கடந்த பிப்ரவரி 2, 2024 இவர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்டார் என்று இவரது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அடுத்த நாள், இது நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நாடகம் செய்தேன் என்று கூறி அப்போதும் சர்ச்சையில் சிக்கினார்.

பல சர்ச்சைகளில் சிக்கிய இவரை டெல்லியில் உள்ள புகழ் பெற்ற நாடக சபையான ராம் லீலா குழு , ராமாயண நாடகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த நாடகத்தில் இலங்கை அரசன் ராவணனின் மனைவி மண்டோதரியாக பூனம் பாண்டே நடிக்கவிருக்கிறார். நாளை முதல் ஆரம்பமாகிறது இந்த நாடகம்.
இந்த நிலையில், நடிகை பூனம் பாண்டே, மண்டோதரி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கா மாட்டார் என்று கூறி பாஜக மற்றும் விஎச்பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பூனம் பாண்டேவுக்கு பதிலாக வேறொருவரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கோரிக்கையும், பலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது எங்களுக்குத் தவறாக தெரியவில்லை. குழுவில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்களில் நடிகை பூனம் பாண்டேவும் ஒருவர் என ராம் லீலா குழு பதிலளித்துள்ளது.
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
{{comments.comment}}