டெல்லி பல்கலைக்கழக முகல் தோட்டத்தின் பெயர் திடீர் மாற்றம்!

Jan 31, 2023,04:18 PM IST
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தின் பெயர் கெளதம புத்தர் நூற்றாண்டு தோட்டம் என மாற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை முகல் கார்டனின் பெயர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த தோட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.



குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான தோட்டம் உள்ளது. இதற்குப் பெயர் முகல் கார்டன். ஆங்கிலேயரான  எட்வின் லூட்யன்ஸ் இதை வடிவமைத்தவர் ஆவார். இந்த தோட்டத்தில் நூற்றுக்கணக்கான ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் உள்ளன. இந்த தோட்டம் ஆண்டுக்கு ஒருமுறை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த முகல் கார்டனின் பெயரை மத்திய அரசு சமீபத்தில் அம்ரித் உத்யான் என்று மாற்றி விட்டது. இது சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் கட்சி இந்த பெயர் மாற்றம், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வர்ணித்துள்ளது. இந்த நிலையில் இன்னொரு முகல் கார்டனின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு தோட்டம் உள்ளது. இதற்குப் பெயரும் முகல் கார்டன்தான். இந்த தோட்டத்தின் பெயரை தற்போது கெளதம புத்தர் நூற்றாண்டு தோட்டம் என்று மாற்றியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். அந்த தோட்டத்தில் ஏற்கனவே ஒரு புத்தர் சிலை உள்ளது. அதை முன்வைத்து தற்போது தோட்டத்தின் பெயரை மாற்றியுள்ளனர். ஆனால் குடியரசுத் தலைவர் மாளிகை முகல் தோட்ட பெயர் மாற்றத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று பல்கலைக்கழக பதிவாளர் விகாஷ் குப்தா கூறியுள்ளார். தோட்டத்தின் பெயரை மாற்றுவது என்பது நீண்ட காலமாக நடந்து வந்த விவாதம்தா என்று அவர் விளக்கியுள்ளார்.

இந்த தோட்டத்துக்கு ஏன் முகல் கார்டன் என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. இது முகலாயர் காலத்தில் கட்டப்பட்டது கிடையாது. அதேபோல முகலாயர் பாணியிலும் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்