சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் தமிழக முதல்வரும், தனது தந்தையுமான முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார். உதயநிதிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது 40க்கு 39 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த படியாக 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போது சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். 2022ம் ஆண்டு விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு துணை முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
திமுகவின் பிரச்சாரங்களில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருவது உதயநிதிதான். அவரது ஒற்றை செங்கல் பிரச்சாரம் நாடு முழுவதும் பாப்புலரானது. அவரது சிம்பிளான பேச்சுக்களும், அதேசமயம், உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் ஸ்டைலும் திமுகவினரைத் தாண்டி பிற கட்சியினராலும் கூட ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
தனது பிறந்த நாளையொட்டி, சென்னை சிஐடி நகரில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று தனது தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தனது தாய் துர்கா ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றார் உதயநிதி. அப்போது உதயநிதி கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் பின்னர் பேரறிஞர் அண்ணா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடங்களுக்கும் சென்று உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செய்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், உயிரையும் உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}