சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் தமிழக முதல்வரும், தனது தந்தையுமான முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார். உதயநிதிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது 40க்கு 39 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த படியாக 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போது சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். 2022ம் ஆண்டு விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு துணை முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

திமுகவின் பிரச்சாரங்களில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருவது உதயநிதிதான். அவரது ஒற்றை செங்கல் பிரச்சாரம் நாடு முழுவதும் பாப்புலரானது. அவரது சிம்பிளான பேச்சுக்களும், அதேசமயம், உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் ஸ்டைலும் திமுகவினரைத் தாண்டி பிற கட்சியினராலும் கூட ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
தனது பிறந்த நாளையொட்டி, சென்னை சிஐடி நகரில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று தனது தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தனது தாய் துர்கா ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றார் உதயநிதி. அப்போது உதயநிதி கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் பின்னர் பேரறிஞர் அண்ணா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடங்களுக்கும் சென்று உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செய்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், உயிரையும் உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}