ஈரோடு இடைத்தேர்தல்...தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Feb 21, 2023,02:54 PM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது, பல விதமான முறைகேடுகள் நடக்கிறது என எதிர்க்கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலவிதமான புகார்களை தெரிவித்து வந்தனர். இதற்கு திமுக தரப்பிலும் பதில் அளிக்கப்பட்டு வந்தது.




இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார்களை விசாரிக்க ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அப்படி குழு அமைக்கப்படும் வரை ஈரோடு தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றுமண சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழுவையும் அமைக்க வேண்டும் என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று (பிப்ரவரி 21) விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், இதே போன்ற வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்