பாட்டு பாடி ஓட்டு கேட்கும் சீமான்...ட்விட்டரில் தாறுமாறாக டிரெண்டாகும் வீடியோ

Feb 14, 2023,11:07 AM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் களைகட்டி உள்ளது. 



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக கட்சிகள் கடும் போட்டி நடத்துகின்றன. இந்த இரண்டு கட்சிகள் சார்பில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்டோர் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பிருந்தே பிரசாரத்தை துவக்கி விட்டனர். இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.



நாம் தமிழர் கட்சி தலைவர் மேனகா, விவசாயி சின்னத்தில் போட்டுயிடுகிறார். இவருக்காக அக்கட்சியின் தலைவரான சீமான், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வழக்கமாக மேடைகளில் ஆவேசமாக பேசும் சீமான், தற்போது பாட்டு பாடி ஓட்டு சேகரிக்க துவங்கி உள்ளார். 

மேனகாவிற்கு ஆதரவாக சீமான், மேடையில் பாட்டுப்பாடி பிரசாரம் செய்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தாறுமாறாக டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் சீமான், ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காதே...கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத...உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம் என விஜயகாந்த் நடித்த கரிமேட்டு கருவாயன் படத்தின் பாடலை ரீமேக் செய்து பாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

news

1500 பக்கங்களில் உருவான திருக்குறளின் கவிக்குரல்.. திருப்பூரில் நூல் வெளியீடு

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்