பாட்டு பாடி ஓட்டு கேட்கும் சீமான்...ட்விட்டரில் தாறுமாறாக டிரெண்டாகும் வீடியோ

Feb 14, 2023,11:07 AM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் களைகட்டி உள்ளது. 



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக கட்சிகள் கடும் போட்டி நடத்துகின்றன. இந்த இரண்டு கட்சிகள் சார்பில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்டோர் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பிருந்தே பிரசாரத்தை துவக்கி விட்டனர். இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.



நாம் தமிழர் கட்சி தலைவர் மேனகா, விவசாயி சின்னத்தில் போட்டுயிடுகிறார். இவருக்காக அக்கட்சியின் தலைவரான சீமான், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வழக்கமாக மேடைகளில் ஆவேசமாக பேசும் சீமான், தற்போது பாட்டு பாடி ஓட்டு சேகரிக்க துவங்கி உள்ளார். 

மேனகாவிற்கு ஆதரவாக சீமான், மேடையில் பாட்டுப்பாடி பிரசாரம் செய்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தாறுமாறாக டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் சீமான், ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காதே...கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத...உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம் என விஜயகாந்த் நடித்த கரிமேட்டு கருவாயன் படத்தின் பாடலை ரீமேக் செய்து பாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்