ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... முதல் சுற்றில் சுயேட்சையிடம் வீழ்ந்த தேமுதிக

Mar 02, 2023,12:45 PM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரை விடவும் தேமுதிக வேட்பாளர் மிக குறைவான ஓட்டுக்களை பெற்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தேமுதிக வேட்பாளர் அவரை முந்தி விட்டார்.



ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக இருக்க, மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. 



முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தை விட சுயேச்சை வேட்பாளர் முத்து பாவா அதிக வாக்குகள் பெற்றார். சுயேச்சை வேட்பாளரான முத்து பாவா  178 ஓட்டுக்களும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளும் பெற்றனர். முதல் சுற்றில் தேமுதிகவை சுயேச்சை முந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஆனால் தற்போது சுயேச்சை பின் தங்கி விட்டார், தேமுதிக சற்று கூடுதல் வாக்குகளைப் பெற்று தப்பியது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்