சர்வதேச தாய் மொழி தினம் 2023 : தாய்மொழியின் முக்கியத்துவமும், வரலாறும்!

Feb 21, 2023,11:16 AM IST
புதுடில்லி : மனித இனம் பரிமாண மாற்றம் அடைந்ததன் முக்கிய அடையாளம் மொழி. இதன் மூலமே ஒருவர் தனது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாற உதவுகிறது. மொழி பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு நாடு, இடத்திற்கும் ஏற்றது போது மொழியும் மாறுபாடு அடைகிறது.



எத்தனை மொழிகளில் கற்றுத் தெரிந்தாலும், ஒரு மனிதனுக்கு உயிராக இருப்பது தாய்மொழி மட்டுமே. தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். அந்த அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற மொழிகளை உயர்வாகவும், தாய்மொழியை சாதாரணமாகவும் நினைக்கும் போக்கு மனிதர்களிடம் அதிகரித்து வருவதால் பேசப்படாததால் பல மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

உலக தாய் மொழி தினம் கொண்டாடுவதன் நோக்கம் : 

இதை தடுக்கும் முறையாகவும், தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ம் தேதி உலக தாய் மொழி தினமாக கொண்டாடப்படகிறது. கலாச்சார பாதுகாப்பு, பண்முகத்தன்மை, பல மொழிகளை கற்க வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமாகும். நூற்றுக்கணக்கான மொழிகளின் தாயாகமாக உள்ளது இந்தியா. பல கலாச்சாரங்கள், பல மொழிகள், இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. 


உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு :

மொழி, தகவல் தொடர்புக்கான சாதனம் மட்டுமல்ல ஒரு கலாச்சாரம், பாரம்பரியத்தின் அடையாளம். சர்வதேச தாய்மொழி தினம் உருவானது வங்கதேசத்தில் தான். 1952 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ம் தேதி வங்க மொழியை தங்களின் தாய்மொழியாக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்த 4 மாணவர்கள் கொல்லப்பட்டதன் நினைவாகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

1999 ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டது. இதை ஐநா பொதுச் சபை வரவேற்றிருந்தது. மொழிகளை பாதுகாக்க வேண்டும். அது உலக மக்களால் மட்டுமே முடியும் என்பதை வலியுறுத்தி இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்