சர்வதேச தாய் மொழி தினம் 2023 : தாய்மொழியின் முக்கியத்துவமும், வரலாறும்!

Feb 21, 2023,11:16 AM IST
புதுடில்லி : மனித இனம் பரிமாண மாற்றம் அடைந்ததன் முக்கிய அடையாளம் மொழி. இதன் மூலமே ஒருவர் தனது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாற உதவுகிறது. மொழி பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு நாடு, இடத்திற்கும் ஏற்றது போது மொழியும் மாறுபாடு அடைகிறது.



எத்தனை மொழிகளில் கற்றுத் தெரிந்தாலும், ஒரு மனிதனுக்கு உயிராக இருப்பது தாய்மொழி மட்டுமே. தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். அந்த அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற மொழிகளை உயர்வாகவும், தாய்மொழியை சாதாரணமாகவும் நினைக்கும் போக்கு மனிதர்களிடம் அதிகரித்து வருவதால் பேசப்படாததால் பல மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

உலக தாய் மொழி தினம் கொண்டாடுவதன் நோக்கம் : 

இதை தடுக்கும் முறையாகவும், தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ம் தேதி உலக தாய் மொழி தினமாக கொண்டாடப்படகிறது. கலாச்சார பாதுகாப்பு, பண்முகத்தன்மை, பல மொழிகளை கற்க வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமாகும். நூற்றுக்கணக்கான மொழிகளின் தாயாகமாக உள்ளது இந்தியா. பல கலாச்சாரங்கள், பல மொழிகள், இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. 


உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு :

மொழி, தகவல் தொடர்புக்கான சாதனம் மட்டுமல்ல ஒரு கலாச்சாரம், பாரம்பரியத்தின் அடையாளம். சர்வதேச தாய்மொழி தினம் உருவானது வங்கதேசத்தில் தான். 1952 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ம் தேதி வங்க மொழியை தங்களின் தாய்மொழியாக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்த 4 மாணவர்கள் கொல்லப்பட்டதன் நினைவாகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

1999 ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டது. இதை ஐநா பொதுச் சபை வரவேற்றிருந்தது. மொழிகளை பாதுகாக்க வேண்டும். அது உலக மக்களால் மட்டுமே முடியும் என்பதை வலியுறுத்தி இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி.. செம்மொழி நாளாக கொண்டாடுவோம்.. திமுக தீர்மானம்

news

திமுகவுக்கு நன்றி.. 2026 தேர்தலையொட்டி எங்களது நகர்வுகள் இருக்கும்.. பிரேமலதா பரபரப்பு பேட்டி

news

ராஜ்யசபா தேர்தல்..தேமுதிகவுக்கு சீட் இல்லை.. 2 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக!

news

நள்ளிரவில் கால்வாயை பார்வையிட்டு நாடகமா.. மதுரை மக்கள் என்ன முட்டாள்களா?.. அண்ணாமலை

news

எடப்பாடி பழனிச்சாமி குறித்து இயல்பை மீறி பேசி விட்டேன்.. வருத்தம் தெரிவிக்கிறேன்.. ஆதவ் அர்ஜூனா

news

மாற்றுத் திறனாளிகள் மற்றும் கல்வியாளர்கள்.. திமுகவில் மேலும் 2 புதிய அணிகள் அறிவிப்பு!

news

நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!

news

கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்