"மெளனம்" பேசுகிறதே... விஞ்ஞானிகள் ஹேப்பி நியூஸ்!

Jul 12, 2023,11:14 AM IST
டெல்லி: அமைதியின் ஒலியை யாராவது கேட்டிருக்கீங்களா.. என்னங்க இது சின்னப்புள்ளைத்தனமா பேசறீங்கன்னு நீங்க கேட்கலாம்.. ஆனால் நிஜம்தானாம்.. அமைதியின் ஒலியைக் கேட்க முடியமாம்.

ஆச்சரியமா இருக்குல்ல.. பட் உண்மைதானாம்.

கிட்டத்தட்ட 1000 பேரிடம் ஆராய்ச்சி நடத்தி இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனராம். "ஆப்டிகல் இல்யூஷன்" கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா.. அதேபோலத்தான் "ஆடிட்டரி இல்யூஷன்" என்றும் ஒன்று உள்ளது. அதுதான் "மெளனத்தின் சத்தம்".. இதை நம்மால் கேட்க முடியுமாம்.  இதைத்தான் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.




இந்த ஆய்வை அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சைக்காலஜி மற்றும் பிலாசபி துறையினர் இணைந்து நடத்தினர். கிட்டத்தட்ட 1000 பேரை இதற்காக ஆய்வு செய்தனர். அவர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகளை தற்போது இக்குழு வெளியிட்டுள்ளது.

இக்குழுவில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆய்வு மாணவர்   ரூயி ஷெ கோ என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், நமது கேட்கும் உணர்வானது ஒலியுடன் சம்பந்தப்பட்டது. ஆனால் அமைதி என்பது சத்தம் அல்ல..  சத்தம் இல்லாத நிலைதான் அமைதி. இருப்பினும் இந்த அமைதின் ஒலியையும் நாம் உணர முடியும். இதுதான் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்பாகும் என்றார்.


ஆடிட்டரி இல்யூஷன் மூலம் நாம் அமைதியின் சத்தத்தை உணர முடியும். கிட்டத்தட்ட வழக்கமான ஒலியைப் போலவே இதையும் கேட்க முடியும். அமைதியும் கூட ஒலிக்கு இணையானதாகவே இருக்கிறது. எனவே நம்மால் நிச்சயம் அமைதியையும் கேட்க  முடியும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

ஓஹோ.. இதனால்தான் நம்ம இயக்குநர் அமீர்.. அப்பவே.. "மெளனம் பேசியதே" அப்படின்னு படம் எடுத்தாரோ!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்