கொசுவை எப்படி ஒழிக்கலாம்?.. மேயர் தலைமையில் ஆக்ஷனில் குதித்தது சென்னை மாநாகராட்சி!

Feb 12, 2023,04:39 PM IST

சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கொசுத் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


சென்னையில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. கொசுத் தொல்லை இதுவரை இல்லாத நிலையில் அதிகரித்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொசுக்கடியால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும், நோய்களும் பரவும் என்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.



இதற்கேற்ப சென்னையில் காய்ச்சலும் பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து  கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. கொசு மருந்து அடிப்பது, சாக்கடைகள் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் அதை சுத்தம் செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.


Jokes: என்ன இது.. சாம்பார்ல ஒரே சில்லறையா கிடக்குது!



இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டமானது மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்