காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்.. உறுப்பினர் கட்டணம் உயர்வு, பிரியங்கா காந்திக்கு 'செக்'

Feb 22, 2023,09:58 AM IST
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் நிர்வாக விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த மாற்றங்கள் விதிமுறைகளாக மாறவுள்ளது. 



காங்கிரஸ் கட்சி தனது நிர்வாக நடைமுறைகளில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளது.  இதுதொடர்பாக கட்சித் தலைவர்களுடன் பல்வேறு சுற்றுக்களாக நடந்து வந்த ஆலோசனைகளின் தொடர்ச்சியாக இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. கட்சித் தொண்டர்களுக்கும், தலைமைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சட்டிஸ்கரில் நடைபெறவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்கு முன்னதாக இந்த மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளன.



இதன்படி, மாநில காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுக்கான வருடாந்திர கட்டணம் ரூ. 100 என்பதிலிருந்து ரூ. 1000 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதில் வளர்ச்சிக் கட்டணம் ரூ. 400 ஆகவும், கட்சி பத்திரிகையான சந்தேஷ் இதழுக்கு ரூ. 300ம் எடுத்துக் கொள்ளப்படும்.

மூத்த காரியக் கமிட்டி உறுப்பினர்களுக்கான வருடாந்திர கட்டணம் ரூ. 3000 ஆக இருக்கும். இந்தக் கட்டண உயர்வின் மூலமாக கட்சியினர் தீவிர சிந்தனையுடன், ஆக்கப்பூர்வமாக செயல்பட வழி பிறக்கும் என கட்சி கருதுகிறது. மேலும் கட்சிக்கான நிதி நெருக்கடியும் குறையும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

காங்கிரஸ் காரியக் கமிட்டி தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இந்தப் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவும். காரணம், மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு இது என்பதால்.  இதிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. முன்னாள் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், லோக்சபா ராஜ்யசபா கட்சித் தலைவர்கள் ஆகியோர் காரியக் கமிட்டிக்கு தாங்களாகவே தேர்வாகி விடுவார்கள். இவர்கள் தேர்தலில் போட்டியிடத் தேவையில்லை. 

மற்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் காரியக் கமிட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த பட்டியலில் பிரியங்கா காந்தி வத்ராவும் சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது அவர் தேர்தலில் போட்டியிட்டுத்தான் காரியக் கமிட்டிக்கு வர முடியும் என்று விதி மாற்றப்பட்டுள்ளது.  ஆனால் இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. தேர்தலில் பிரியங்கா போட்டியிட்டால் அவருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

மேலும் ஜாதிவாதிப் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசி வகுப்பினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  விரைவில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி.. செம்மொழி நாளாக கொண்டாடுவோம்.. திமுக தீர்மானம்

news

திமுகவுக்கு நன்றி.. 2026 தேர்தலையொட்டி எங்களது நகர்வுகள் இருக்கும்.. பிரேமலதா பரபரப்பு பேட்டி

news

ராஜ்யசபா தேர்தல்..தேமுதிகவுக்கு சீட் இல்லை.. 2 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக!

news

நள்ளிரவில் கால்வாயை பார்வையிட்டு நாடகமா.. மதுரை மக்கள் என்ன முட்டாள்களா?.. அண்ணாமலை

news

எடப்பாடி பழனிச்சாமி குறித்து இயல்பை மீறி பேசி விட்டேன்.. வருத்தம் தெரிவிக்கிறேன்.. ஆதவ் அர்ஜூனா

news

மாற்றுத் திறனாளிகள் மற்றும் கல்வியாளர்கள்.. திமுகவில் மேலும் 2 புதிய அணிகள் அறிவிப்பு!

news

நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!

news

கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்