மு.க.ஸ்டாலின் இனி "ஆல் இந்தியா தலைவர்".. ஈவிகேஎஸ் இளங்கோவன்!

Mar 04, 2023,10:30 AM IST
சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இனியும் பிராந்திய தலைவர் கிடையாது. அவர் ஆல் இந்தியா தலைவர் என்று ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்காக காங்கிரஸ்காரர்களை விட திமுகவினர்தான் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன.




பண பலம் மிகப் பெரிய அளவில் களமாடியது. திமுக கூட்டணித் தரப்பிலும், அதிமுக தரப்பிலும் சரி சமமாக பணத்தை இறக்கி விளையாடியதாக பல்வேறு செய்திகள், புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் வெளியாகின. இருப்பினும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் தான் ஏற்கனவே தேசிய அரசியலில் இருப்பதாக பொருத்தமாக கூறியுள்ளார். அவர் இனியும் பிராந்தியத் தலைவர் இல்லை. அவர் ஆல் இந்தியா தலைவர்.   அவர் சொன்னது போல அவர் ஏற்கனவே அகில இந்திய அரசியலில் இருக்கிறார்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், மக்கள், மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறார், எப்படிச் செயல்படுகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்து அதை பின்பற்றவும் செய்கிறார்கள். அந்த வகையில் அவர் அகில இந்திய தலைவர்தான் என்றார் இளங்கோவன்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்