டிரோனில் மருந்து அனுப்பி ரிஷிகேஷ் எய்ம்ஸ் சாதனை.. விரைவில் மதுரை எய்ம்ஸிலும் எதிர்பார்க்கலாமா!

Feb 17, 2023,10:13 AM IST
கார்வால்:  உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளுக்கு டிரோன் மூலம் காசநோய் மருந்துகளை டெலிவரி செய்து  ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.



கிட்டத்தட்ட மலைப் பகுதியில் 40 கிலோமீட்டர் வரை இந்த டிரோன் சென்று மருந்துகளை டெலிவரி செய்துள்ளது. இதற்கு அந்த டிரோன் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் அரை மணி நேரம்தான். இதுவே சாலை மார்க்கமாக போயிருந்தால் குறைந்தது 2 மணி நேரமாவது ஆயிருக்குமாம்.

கார்வால் மாவட்டம் தேரி பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்குத்தான் இந்த மருந்துகள் டிரோன் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளன. ரிஷிகோஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து இந்த டிரோன் செலுத்தப்பட்டது.  இது சோதனை முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் மீனு சிங் கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் தொலை தூரத்தில், மலைப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுக்க டிரோன்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சோதனை முற்சியாகவே இந்த மருந்துகள் அனுப்பப்பட்டன. மருந்துகள் போய்ச் சேர்ந்ததும், அங்கிருந்து காசநோய் சோதனை மாதிரிகள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரியாக வந்து சேர்ந்தன.

டிரோன் மூலம் மருந்துகளை அனுப்புவதால், நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அலைய வேண்டியது குறைகிறது. மேலும் மருந்துகளை விரைவாகவும் அவர்களால் பெற முடியும். பாதுகாப்பும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் அவர்.

ஜம்மு காஷ்மீரில் முன்பு இந்திய ராணுவம், பனி படர்ந்த பகுதிகளில் ராணுவத்தினருக்கு பூஸ்டர் டோஸ் கோவிட் ஊசி மருந்துகளை அனுப்ப டிரோன்களை முன்பு பயன்படுத்தியது.  அதேபோல மகாராஷ்டிராவிலும் தொலை தூர கிராமங்களுக்கு டிரோன்கள் மூலம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன என்பது நினைவிருக்கலாம். அதே பாணியில் தற்போது ரிஷிகேஷ் எய்ம்ஸ் இந்த மருந்து அனுப்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்தும் இதுபோல தொலை தூர கிராமங்களுக்கு மருந்துகள் அனுப்பும் நாள் வரும் என்று நம்புவோம்!

சமீபத்திய செய்திகள்

news

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி.. செம்மொழி நாளாக கொண்டாடுவோம்.. திமுக தீர்மானம்

news

திமுகவுக்கு நன்றி.. 2026 தேர்தலையொட்டி எங்களது நகர்வுகள் இருக்கும்.. பிரேமலதா பரபரப்பு பேட்டி

news

ராஜ்யசபா தேர்தல்..தேமுதிகவுக்கு சீட் இல்லை.. 2 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக!

news

நள்ளிரவில் கால்வாயை பார்வையிட்டு நாடகமா.. மதுரை மக்கள் என்ன முட்டாள்களா?.. அண்ணாமலை

news

எடப்பாடி பழனிச்சாமி குறித்து இயல்பை மீறி பேசி விட்டேன்.. வருத்தம் தெரிவிக்கிறேன்.. ஆதவ் அர்ஜூனா

news

மாற்றுத் திறனாளிகள் மற்றும் கல்வியாளர்கள்.. திமுகவில் மேலும் 2 புதிய அணிகள் அறிவிப்பு!

news

நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!

news

கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்