தென் ஆப்பிரிக்காவிலிருந்து.. மத்தியப் பிரதேசத்திற்கு வரும்.. 12 சிறுத்தைகள்!

Feb 17, 2023,04:26 PM IST
போபால்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகள், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு பிப்ரவரி 18ம் தேதி வருகின்றன.



12 சிறுத்தைகளில் 5 பெண் சிறுத்தைகள் ஆகும்.  தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகளை அன்பளிப்பாக கோரியிருந்தது இந்தியா. இதையடுத்து தற்போது இந்த சிறுத்தைகளை தென் ஆப்பிரிக்கா நமக்கு வழங்கவுள்ளது. 

சிறுத்தைகள் வந்து சேர்ந்ததும் அவை குனோ தேசிய பூங்காவில் விடப்படும். சிறுத்தைகளை பூங்காவுக்குள் திறந்து விடும் நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர்யாதவ், முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோர் கலந்து கொள்வார்கள். குனோ தேசியப் பூங்கா, சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, தனது 72வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, இதே குனோ தேசியப் பூங்காவில், நமீயாவிலிருந்து வருகை தந்த 8 கருஞ்சிறுத்தைகளை திறந்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.  அதில் ஐந்து பெண் ஆகும்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகளையும் கொண்டு வருவதற்காக, இந்திய விமானப்படை விமானம் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்த சிறுத்தைகள் நேராக குவாலியலிர் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

என்னுள் உறைந்தவன்(ள்)

news

சிந்தையிலே என் தாயும் தினம் சிந்திக்கச் சொன்னதும் அன்பே...

news

பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

news

அனுபவம் பெற.. பல தோல்விகளும் சில துரோகிகளும் தேவை!

news

காவிரி சம்பந்தமாக மத்திய அரசை சந்திக்க தவெக அரசு முன்வருமா?.. கனிமொழி கேள்வி

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா

அதிகம் பார்க்கும் செய்திகள்