6 முதல் 12ம் வகுப்பு வரையிலான புத்தகங்களைப் படித்தாலே போதும்.. அரசுத் தேர்வுகளில் ஈஸியா பாஸ் ஆகலாம்!

Dec 09, 2024,04:14 PM IST

சிவகங்கை : 6 முதல் 12 வரைவிலான பாடநூல்களை படித்தாலே அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளலாம். கல்வி மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை தரும் என கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து வானொலி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மாணவர்களிடம் வலியுறுத்தி பேசினார்.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுடன் வானொலி ஒருங்கிணைப்பாளர்  கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த அகில இந்திய வானொலி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் நவநீதன் ஆகியோரை ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். 




இதனை தொடர்ந்து மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் நவநீதன் ஆகியோர் மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்கள். அப்போது வேல்முருகன் மாணவர்களிடம் பேசுகையில், 


வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வி மட்டுமே மிகுந்த உதவியாக இருக்கும்.படிப்பு ,படிப்பு ,படிப்பு என்பது வாழ்க்கையில் எப்பொழுதுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  தமிழ்நாடு அரசின் 6 முதல் 12 வகுப்பு வரையிலான பாட நூல்களைப் படித்தால் ஐஏஎஸ் தேர்வு வரை மிக எளிதாக பதிலளிக்கலாம்.




ஆறாவது முதல் 10 வரையிலான படிப்பை கவனமுடன் படியுங்கள். அந்த புத்தகங்களில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுகிறது. எனவே கல்வியை முக்கியமாக வாழ்க்கையில் வைத்துக்கொள்ளுங்கள். வெற்றி தானாக வந்து சேரும். கல்லூரிக்கே  போகாமல் மாநில மற்றும் மத்திய அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.


 நான் பலமுறை போட்டித் தேர்வுகளில் தோல்வியுற்றாலும் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரே இலக்குடன் முயற்சி செய்ததால் மாநில அரசின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பிறகு அப்பணியில் இருந்து மத்திய அரசின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று மத்திய அரசு ஊழியராக பணியாற்றி கிறேன்.எனவே நன்றாகப் படியுங்கள். வாழ்க்கையில் வெற்றி எளிதாகக் கிடைக்கும் என பேசினார்.விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் புதிய திசையை தீர்மானிக்கும்- பிரதமர் மோடி பெருமிதம்

news

தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு...நாளை விவாதம்

news

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல்

news

"ஹலோ.. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா".. From Shared Telephones to Endless Updates!

news

பரமபதம் விளையாட்டு.. முன்னோர்கள் வகுத்து வந்த அபாரமான விளையாட்டு!

news

Sripriya Short Story: வாய்மையே வெல்லும்!

news

கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!

news

சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11

news

நான் வெறும் உடன்பிறப்பு மட்டுமல்ல—.. If I stand strong today!

அதிகம் பார்க்கும் செய்திகள்