சில்வர் ஜூப்ளி காணும்.. அய்யன் திருவள்ளுவர் சிலை.. தேவகோட்டை பள்ளியில் செல்பி கொண்டாட்டம்!

Dec 21, 2024,03:35 PM IST

சிவகங்கை: கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசம் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம், கவிதை என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  கூடவே செல்பி எடுக்கும் புகைப்படப் போட்டியும் நடைபெற்றது.


அய்யன் திருவள்ளுவருக்கு  குமரிக் கடல் நடுவே, விவேகானந்தர் மண்டபத்திற்கு அருகே 30 அடி உயரமுள்ள பாறை மீது 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு, 2000, ஜனவரி 1 இல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 2025-ஆம் ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால்  திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1, ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்படவுள்ளது.




கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவர்களுக்கு திருக்குறளை எடுத்துச் சொல்லும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 


இதில் ஆறு வயது முதல் உள்ள மாணவர்கள் ஒரு அதிகாரமும், 10 வயது வரை உள்ள மாணவர்கள் மூன்று அதிகாரங்களும், 14 வயது வரை உள்ள மாணவர்கள் ஐந்து அதிகாரங்களையும் ஒப்பிவித்து அதனை வீடியோவாக பதிவேற்றம் செய்தனர். அதேபோல் ஓவியம் வரையும் திறமையுள்ள முதல் ஐந்து வகுப்பு மாணவர்கள் திருவள்ளுவரின் படத்தை வரைந்து புகைப்படம் எடுத்தனர். 




இது தவிர திருக்குறளின் சிறப்பு குறித்து இப்பள்ளி மாணவ மாணவியர்கள் கவிதை கூறி அதனையும் வீடியோவாக பதிவு செய்தனர்.  இதனைத் தொடர்ந்து தேவகோட்டை பள்ளி மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள திருக்குறள் எழுதப்பட்ட இடத்தில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 




மேலும் திருவள்ளுவர் சிலை 25 வது ஆண்டு முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்த வீடியோக்கள், திருக்குறளுடன் எடுத்த செல்பி,திருக்குறள் கவிதை வீடியோக்கள், திருக்குறள் ஓவியம் வரைந்த புகைப்படங்கள், அனைத்தையும் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினார்கள்.




இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதர், முத்துமினாள் ஆகியோர் செய்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!

news

என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை

news

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு

news

cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்

news

இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!

news

தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

news

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!

news

வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்