விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி இன்று முதல் 5ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அடி அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி ஆகிய நாட்களில் இம்மலைக்கு அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மஹாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோவிலின் சிறப்பாகும்.
இந்த கோவிலுக்கு செல்லும் பாதை வனப்பகுதிக்குட்பட்ட மலைப்பாதை என்பதால் இங்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். தினமும் இங்கு சாமி தரிசனம் செய்ய முடியாது. மாதத்திற்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்களுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
சதுரகிரி மலைக்கு மற்ற அமாவாசைகளை விட ஆடி அமாவாசைக்கு தான் அதிகளவில் கூட்டம் வரும். இந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி (இன்று) முதல் 5 ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதே போல 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது.
இங்கு இரவில் தங்கக்கூடாது. அருகில் உள்ள ஓடைகளிலும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்களின் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மக்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் முன்னேற்பாட்டு பணிகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர். இந்த 5 நாட்களுக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வனத்துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
IPL 2025.. மார்ச் 22 முதல் அதிரடி ஐபிஎல் திருவிழா.. 23ம் தேதி சென்னையின் முதல் போர்.. மும்பையுடன்!
வெயில் அதிகரிக்கும்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே.. IMD Chennai எச்சரிக்கை
திமிராகப் பேசினால்.. தமிழர்களின் தனிக் குணத்தை டெல்லி பார்க்க நேரிடும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
காலாவதியான கொள்கையை.. தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா?.. அண்ணாமலை கேள்வி
அஞ்சு கட்சி அமாவாசை.. பத்து ரூபாய் தியாகி.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு.. ஜெயக்குமார் பதிலடி
டப்பிங் இல்லாமல் நேரடியாக பதில் சொல்வாரா பதுங்குகுழி பழனிச்சாமி.. அமைச்சர் செந்தில் பாலாஜி
விகடனுக்குத் தடை செய்வது.. மும்மொழிக் கொள்கையைத் திணிப்பது.. இதுதான் பாசிசம்.. விஜய்
விகடன் இணையதள முடக்கத்திற்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்!
கும்பமேளா பயணிகள் 18 பேர் பலி.. டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த விபரீதத்திற்கு இதுதான் காரணம்!
{{comments.comment}}