சென்னை: பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை இனி வீட்டிலிருந்த படியே எளிதில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்திருப்பது, அங்கும் இங்கும் அலைவதை தவிர்க்கும் வகையில், பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரையிலான 50 வகையான அத்தியாவசிய அரசு சேவைகளை இனி வீட்டிலிருந்தே இணையம் வாயிலாகப் பெறும் வசதியைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி, வெளிப்படையான முறையில் சான்றிதழ்களைப் பெறலாம். கால விரயம் குறைகிறது. அத்துடன் ஆன்லைன் போர்டல் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் எந்நேரமும் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் படி, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் (Legal Heir Certificate), பட்டா மாறுதல் மற்றும் நில ஆவணங்கள், முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்கள், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டப் பதிவுகள், மின் இணைப்பு மாற்றங்கள் மற்றும் குடிநீர் வரி செலுத்துதல் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகளை எளிதில் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரசின் அதிகாரப்பூர்வமான e-Sevai (இ-சேவை) தளம் அல்லது மக்களுடன் முதல்வர் முகாம்கள் மூலம் இந்தச் சேவைகளைப் பெற முடியும். மேலும், ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அரசு செயலிகள் வாயிலாக ஆவணங்களைப் பதிவேற்றி, டிஜிட்டல் முறையில் கையொப்பமிட்ட சான்றிதழ்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் முன்னிலையில் வாட்ஸ் அப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் (whatsapp) எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம் என்று மெடா நிறுவனத்தின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}