- வே.ஜெயந்தி
கற்ற கல்வி உதவுமா?
என்ன கேள்வி அது மனிதனே!
கண் போலவே கல்வியும்
வாழ்க்கைக்கு ஒளி தருமே.
கண் மூடினால் உலகம் முழுவதும்
இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;
கல்வி இல்லா மனம் ஒருநாள்
தவறான பாதை சென்றிடுமே.
கண் திறந்தால் வழி தெரியும்,
கல்வி கற்றால் உண்மை தெரியும்;

அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து
அச்சம் அனைத்தும் அகன்றிடும்.
செல்வம் இன்று வரும் போகும்,
புகழும் நாளை மாறிடும்;
கற்ற கல்வி கைவிடாது
காலம் முழுவதும் காத்திடும்.
கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,
அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு
இருள் எதற்கு? பயம் எதற்கு?
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
இளமை திரும்பிய தருணம்.. கூடுவாஞ்சேரியில் கோலாகலமாக நடந்த மூத்த குடிமக்கள் சங்கமம்
நட்பு எனும் கவசம்
ஆச்சரியம் ஆனால் உண்மை
கற்ற கல்வி உதவுமா?
கலகலக்க வைக்கும் கிராமத்து விளையாட்டுகள்.. அது ஒரு பொற்காலம்!
"என்னை மூச்சடைக்க வைக்காதே அர்ஜூன்".. (நீ மழை.. 5)
T20 World Cup: ஈடன் கார்டனை அதிர விட்ட சேட்டன் சஞ்சு.. செம ஆட்டம்.. செமி பைனலில் இந்தியா!
Iran Flashback: அயதுல்லா கொமேனி யார் தெரியுமா?.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள லிங்க்!
{{comments.comment}}