- வே.ஜெயந்தி
கற்ற கல்வி உதவுமா?
என்ன கேள்வி அது மனிதனே!
கண் போலவே கல்வியும்
வாழ்க்கைக்கு ஒளி தருமே.
கண் மூடினால் உலகம் முழுவதும்
இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;
கல்வி இல்லா மனம் ஒருநாள்
தவறான பாதை சென்றிடுமே.
கண் திறந்தால் வழி தெரியும்,
கல்வி கற்றால் உண்மை தெரியும்;

அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து
அச்சம் அனைத்தும் அகன்றிடும்.
செல்வம் இன்று வரும் போகும்,
புகழும் நாளை மாறிடும்;
கற்ற கல்வி கைவிடாது
காலம் முழுவதும் காத்திடும்.
கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,
அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு
இருள் எதற்கு? பயம் எதற்கு?
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}