கற்ற கல்வி உதவுமா?

Mar 02, 2026,10:45 AM IST

- வே.ஜெயந்தி


கற்ற கல்வி உதவுமா?

என்ன கேள்வி அது மனிதனே!


கண் போலவே கல்வியும்

வாழ்க்கைக்கு ஒளி தருமே.


கண் மூடினால் உலகம் முழுவதும்

இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;


கல்வி இல்லா மனம் ஒருநாள்

தவறான பாதை சென்றிடுமே.


கண் திறந்தால் வழி தெரியும்,

கல்வி கற்றால் உண்மை தெரியும்;




அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து

அச்சம் அனைத்தும் அகன்றிடும்.


செல்வம் இன்று வரும் போகும்,

புகழும் நாளை மாறிடும்;


கற்ற கல்வி கைவிடாது

காலம் முழுவதும் காத்திடும்.


கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,

அவ்வளவே கல்வி வாழ்க்கைக்கு;


அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு

இருள் எதற்கு? பயம் எதற்கு? 


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்