- வே.ஜெயந்தி
கற்ற கல்வி உதவுமா?
என்ன கேள்வி அது மனிதனே!
கண் போலவே கல்வியும்
வாழ்க்கைக்கு ஒளி தருமே.
கண் மூடினால் உலகம் முழுவதும்
இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;
கல்வி இல்லா மனம் ஒருநாள்
தவறான பாதை சென்றிடுமே.
கண் திறந்தால் வழி தெரியும்,
கல்வி கற்றால் உண்மை தெரியும்;

அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து
அச்சம் அனைத்தும் அகன்றிடும்.
செல்வம் இன்று வரும் போகும்,
புகழும் நாளை மாறிடும்;
கற்ற கல்வி கைவிடாது
காலம் முழுவதும் காத்திடும்.
கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,
அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு
இருள் எதற்கு? பயம் எதற்கு?
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
கம்பனும் கவியும்
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
என் இராமனே!
கொழுக்கட்டை
ஆண் பூ
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
{{comments.comment}}