கற்ற கல்வி உதவுமா?

Mar 02, 2026,10:45 AM IST

- வே.ஜெயந்தி


கற்ற கல்வி உதவுமா?

என்ன கேள்வி அது மனிதனே!


கண் போலவே கல்வியும்

வாழ்க்கைக்கு ஒளி தருமே.


கண் மூடினால் உலகம் முழுவதும்

இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;


கல்வி இல்லா மனம் ஒருநாள்

தவறான பாதை சென்றிடுமே.


கண் திறந்தால் வழி தெரியும்,

கல்வி கற்றால் உண்மை தெரியும்;




அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து

அச்சம் அனைத்தும் அகன்றிடும்.


செல்வம் இன்று வரும் போகும்,

புகழும் நாளை மாறிடும்;


கற்ற கல்வி கைவிடாது

காலம் முழுவதும் காத்திடும்.


கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,

அவ்வளவே கல்வி வாழ்க்கைக்கு;


அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு

இருள் எதற்கு? பயம் எதற்கு? 


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்