தடுமாற்றத்திலிருந்து தலைசிறந்த மாணவனாக!

Feb 28, 2026,11:15 AM IST

- வே.ஜெயந்தி


“இந்த மாணவனை எப்படி சமாளிப்பது?” 


ஒரு நாள் வகுப்பறையில் நின்றபோது என் மனதில் எழுந்த கேள்வி அது. ஆனால் இன்று, அதே மாணவனை நினைக்கும் போது என் மனதில் பெருமை மட்டுமே நிரம்புகிறது.


ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு கதை இருக்கிறது. சில கதைகள் பாடப்புத்தகங்களில் இல்லை; அவை ஆசிரியர்களின் பொறுமையிலும் அன்பிலும் எழுதப்படுகின்றன.


இது என் 7ஆம் வகுப்பு மாணவனின் மாற்றக் கதை.  தடுமாற்றத்திலிருந்து தலைசிறந்த நிலைக்கு உயர்ந்த ஒரு பயணம்.


ஆரம்பத்தில் அந்த மாணவன் வகுப்பில் அடிக்கடி குறுக்கீடு செய்தான். பாடம் நடக்கும் போது இடைமறித்து பேசுதல், நண்பர்களை கிண்டல் செய்தல், பணிகளை தவிர்த்தல்  இவை அவனின் தினசரி பழக்கங்களாகிவிட்டன.


ஆசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் அது சிரமத்தை ஏற்படுத்தியது. அவரை தண்டிப்பது எளிது. ஆனால் நான் நினைத்தேன். “இந்த நடத்தையின் பின்னால் ஏதோ சொல்லப்படாத கதை இருக்கலாம்.” அதனால் நான் தண்டனையை விட புரிதலைத் தேர்ந்தெடுத்தேன்.




தனிப்பட்ட ஆலோசனை, சிறிய நல்ல செயல்களுக்குக் கூட பாராட்டு, அவனிடம் காட்டிய நம்பிக்கை  இவை மெதுவாக அவனுள் மாற்றத்தின் விதையை விதைத்தன.


ஒவ்வொரு சிறிய முன்னேற்றத்திற்கும் நான் பாராட்டினேன். அவன் கண்களில் ஒரு ஒளி பிறந்தது. அந்த ஒளியே அவன் வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது. சில வாரங்களில் கணிசமான மாற்றம் தென்பட்டது.


ஒருகாலத்தில் குறுக்கீடு செய்த மாணவன் இன்று வகுப்பில் கவனமாகவும் ஒழுக்கத்துடனும் நடந்து, நண்பர்களுக்கு உதவும் மாணவனாக மாறியுள்ளார். இன்று அவர் அனைவராலும் நேசிக்கப்படும், பொறுப்புணர்வுள்ள மாணவன்


மாணவர்களை அவர்கள் செய்த தவறுகளால் அல்ல, அவர்களின் திறமைகளால் காண கற்றுக்கொள்ள வேண்டும்.

தண்டனையை விட புரிதல் பலம் வாய்ந்தது.


கோபத்தை விட அன்பு ஆழமானது. அவநம்பிக்கையை விட நம்பிக்கை மாற்றத்தை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தையிலும் ஒரு ஒளி இருக்கிறது; அதை ஏற்றுவது ஆசிரியரின் பொறுப்பு.


(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி

news

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு

news

"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி

news

அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்

news

வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)

news

ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு

news

Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!

news

ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!

news

2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!

அதிகம் பார்க்கும் செய்திகள்