- டிலாணி ஸ்ரீதரன்
"அகிலத்திலுள்ள" தலைச்சிறந்த
சொற்களின் கோர்வையானவள்
ஆதிசிவனின்
அங்கத்தில்
பாதியாகி அர்த்தநாரியானவள்
இல்லறவாழ்வில் இன்பதுன்பம்
மறந்து இயந்திரமானவள்
ஈகையில்லாத அன்பில்
ஈர்ப்பு விசையானவள்
உலகசாதனைகளும் நடத்தி
ஆணுக்குப்பெண் நிகரானவள்
ஊனமென்ற வார்த்தையை
வாழ்க்கையில் உடைத்தெறிந்தவள்

எட்டயப்புரத்தானின்
ஏவலில்
புதுமைப்
பெண்ணாணவள்
ஏட்டுக்கல்வியிலும் எட்டுத்திக்கும்
புகழ்ப்பெற்று எடுத்துக்காட்டானவள்
ஐம்பெரும் காப்பியங்களில்
அழியாத பாவையானவள்
ஒளிச்சுடராய் மண்ணுலகுக்கு
வெளிச்சம் தந்தவள்
ஓயாத கடலலையாய்
ஓய்வில்லாமல் ஓடுபவள்
ஒளவை,கண்ணகியென
கர்ப்புநெறி காத்தவள்
அஃதே தாய்மையெனும்
தனித்துவத்தையும் பெற்றவள்
"தரணியை" தடம்
புரடவிடாமல் இயக்குபவள்
சிந்தனைச் சிதறல்.. பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தை.. ஆகச்சிறந்த ஆறுதல்!
இன்னுயிர் நீ என் அருகில் வா!
கோடு தாண்டாத தூரம்!
செலவு போல தீர்ந்து போகும் வாழ்க்கையும் தான்!
பெண் என்பவள்
Short Story: நீக்கறதா.. வேண்டாமா?
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
{{comments.comment}}