- டிலாணி ஸ்ரீதரன்
தாய்ப்பாலின் உன்னதம்
அறியாத அனாதைகள்,
ஊனத்தோடு பிறப்போரின்
ஊசலாடும் எண்ணங்கள்,
காட்டுமிராண்டிகளால்
கருவறுக்கப்படும்
சிசுக்களின் வலிகள்,
கள்ளிப்பாலில்
பலியாகும்
பெண்ணுயிர்களின்
ரணங்கள்,
மூர்க்கத்தனமான கணவனிடம்
அனுபவிக்கும் கொடுமைகள்,
மலடியென்ற
பட்டத்தில் மனமுடையும்
பெண்மைகள்,

மாதவிடாயில் முடக்கும்
தேகத்தின் மாற்றங்கள்,
இணையர்களை இழந்தவர்களின்
தனிமையின்
முதியோர் இல்லத்தில்
விடப்பட்டவர்களின்
கண்ணீர்த்துளிகள் ,
வறுமையறியாத
பிஞ்சுகளின்
நெஞ்சத்துக்
குமுறல்கள்,
சொல்லிலடங்காத
வேதனைகளும்
சொல்லித் தீராதவைகளும்
விதியென விளையாடும்
சத்தமில்லாத சத்தங்களாக....!
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}