- டிலாணி ஸ்ரீதரன்
தாய்ப்பாலின் உன்னதம்
அறியாத அனாதைகள்,
ஊனத்தோடு பிறப்போரின்
ஊசலாடும் எண்ணங்கள்,
காட்டுமிராண்டிகளால்
கருவறுக்கப்படும்
சிசுக்களின் வலிகள்,
கள்ளிப்பாலில்
பலியாகும்
பெண்ணுயிர்களின்
ரணங்கள்,
மூர்க்கத்தனமான கணவனிடம்
அனுபவிக்கும் கொடுமைகள்,
மலடியென்ற
பட்டத்தில் மனமுடையும்
பெண்மைகள்,

மாதவிடாயில் முடக்கும்
தேகத்தின் மாற்றங்கள்,
இணையர்களை இழந்தவர்களின்
தனிமையின்
முதியோர் இல்லத்தில்
விடப்பட்டவர்களின்
கண்ணீர்த்துளிகள் ,
வறுமையறியாத
பிஞ்சுகளின்
நெஞ்சத்துக்
குமுறல்கள்,
சொல்லிலடங்காத
வேதனைகளும்
சொல்லித் தீராதவைகளும்
விதியென விளையாடும்
சத்தமில்லாத சத்தங்களாக....!
Tamil Nadu Assembly Elections 2026: பெண் வேட்பாளர்களே இல்லாத தமிழகத்தின் 46 தொகுதிகள்!
அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு
இமாலய வெற்றியை நோக்கி...தமிழக தேர்தல் களம் குறித்து அண்ணாமலை அதிரடி கணிப்பு
அவசரச் சிகிச்சை... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி
சிந்திப்போம்.. மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்?
சித்திரை பிறக்கப் போகுது.. அட்சய திரிதியையும் வந்தாச்சு.. தங்கம் மட்டும்தான் வாங்கணுமா
சத்தமில்லாச் சத்தங்கள்
Deepa Ravi Poem: கவிதையென்பது!
Be like a bee
{{comments.comment}}