- டிலாணி ஸ்ரீதரன்
தாய்ப்பாலின் உன்னதம்
அறியாத அனாதைகள்,
ஊனத்தோடு பிறப்போரின்
ஊசலாடும் எண்ணங்கள்,
காட்டுமிராண்டிகளால்
கருவறுக்கப்படும்
சிசுக்களின் வலிகள்,
கள்ளிப்பாலில்
பலியாகும்
பெண்ணுயிர்களின்
ரணங்கள்,
மூர்க்கத்தனமான கணவனிடம்
அனுபவிக்கும் கொடுமைகள்,
மலடியென்ற
பட்டத்தில் மனமுடையும்
பெண்மைகள்,

மாதவிடாயில் முடக்கும்
தேகத்தின் மாற்றங்கள்,
இணையர்களை இழந்தவர்களின்
தனிமையின்
முதியோர் இல்லத்தில்
விடப்பட்டவர்களின்
கண்ணீர்த்துளிகள் ,
வறுமையறியாத
பிஞ்சுகளின்
நெஞ்சத்துக்
குமுறல்கள்,
சொல்லிலடங்காத
வேதனைகளும்
சொல்லித் தீராதவைகளும்
விதியென விளையாடும்
சத்தமில்லாத சத்தங்களாக....!
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??
{{comments.comment}}