- டிலாணி ஸ்ரீதரன்
தாய்ப்பாலின் உன்னதம்
அறியாத அனாதைகள்,
ஊனத்தோடு பிறப்போரின்
ஊசலாடும் எண்ணங்கள்,
காட்டுமிராண்டிகளால்
கருவறுக்கப்படும்
சிசுக்களின் வலிகள்,
கள்ளிப்பாலில்
பலியாகும்
பெண்ணுயிர்களின்
ரணங்கள்,
மூர்க்கத்தனமான கணவனிடம்
அனுபவிக்கும் கொடுமைகள்,
மலடியென்ற
பட்டத்தில் மனமுடையும்
பெண்மைகள்,

மாதவிடாயில் முடக்கும்
தேகத்தின் மாற்றங்கள்,
இணையர்களை இழந்தவர்களின்
தனிமையின்
முதியோர் இல்லத்தில்
விடப்பட்டவர்களின்
கண்ணீர்த்துளிகள் ,
வறுமையறியாத
பிஞ்சுகளின்
நெஞ்சத்துக்
குமுறல்கள்,
சொல்லிலடங்காத
வேதனைகளும்
சொல்லித் தீராதவைகளும்
விதியென விளையாடும்
சத்தமில்லாத சத்தங்களாக....!
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}