Tamil Puthandu: அகம் மகிழ்ந்திட அழிவுகளை நீக்கிட.. சித்திரை மகளே வா!

Apr 14, 2026,01:32 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


அகம் மகிழ்ந்திட 

அழிவுகளை நீக்கிட


ஆனந்தம் பெருகிட

ஆணவம் அழித்திட


இன்பத்தை கூட்டிட 

இன்னல்களை களைத்திட


ஈருலகம் போற்றிட

ஈனச்செயல்களை

பொசுக்கிட




உறவுகளை சேர்த்திட

உறங்கி கிடப்போரை எழுப்பிட


ஊக்கமதை தந்திட

ஊனமென்ற எண்ணத்தை

ஒழித்திட


எண்ணங்களை வண்ணங்களாக்கிட

எதிரிகளில்லாத உலகமாக்கிட


ஏக்கங்களை நிறைவேற்றிட

ஏழ்மை நிலையை

அகற்றிட


ஐங்குரவரும் வாழ்த்திட

ஐயத்தை தளர்த்திட


ஒற்றுமையை பலமாக்கிட

ஒரு மனதாக 

வேற்றுமை

மறந்திட


ஓங்கியே புகழ் பரவிட

ஓட்டைக் குடில்களுக்கும் 

விடிந்திட


ஒளவையைப் போல்

நீடுழி வாழ்ந்திட

ஒளடதமாய் நோய் நொடிகளை விரட்டிட


அஃதே அகர 

வரிசையில் கவிதையினை

படைத்தேன்....


அன்போடு வந்துவிடு...

ஆரவாரம் தந்துவிடு ....

கருணையை பொழிந்து விடு....

களியாட்டங்களைக் 

கண்டு விடு....

களிப்புற செய்துவிடு....

கனிவான பயணத்தை

தொடக்கிவிடு....


சிறப்புடன் வந்துவிடு 

சித்திரை மகளே.....

தமிழ் மகளே வந்துவிடு....

தரணியை வளம் பெற 

செய்து விடு...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

news

பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி.. மதுரைக் காஞ்சி கூறும் மதுரையின் சிறப்புகள்!

news

எழுத்தாளர் மனைவி!

news

உன்னைப் பார்க்காத நாள்களில் நான் என்னை இழந்தேன்!

news

Tamil Poem: பனித்துளி!

news

500 ஆண்டு பழமையான சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்.. அருள் தந்து காக்கும் அன்னை!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

அதிகம் பார்க்கும் செய்திகள்