- டிலாணி ஸ்ரீதரன்
அகம் மகிழ்ந்திட
அழிவுகளை நீக்கிட
ஆனந்தம் பெருகிட
ஆணவம் அழித்திட
இன்பத்தை கூட்டிட
இன்னல்களை களைத்திட
ஈருலகம் போற்றிட
ஈனச்செயல்களை
பொசுக்கிட

உறவுகளை சேர்த்திட
உறங்கி கிடப்போரை எழுப்பிட
ஊக்கமதை தந்திட
ஊனமென்ற எண்ணத்தை
ஒழித்திட
எண்ணங்களை வண்ணங்களாக்கிட
எதிரிகளில்லாத உலகமாக்கிட
ஏக்கங்களை நிறைவேற்றிட
ஏழ்மை நிலையை
அகற்றிட
ஐங்குரவரும் வாழ்த்திட
ஐயத்தை தளர்த்திட
ஒற்றுமையை பலமாக்கிட
ஒரு மனதாக
வேற்றுமை
மறந்திட
ஓங்கியே புகழ் பரவிட
ஓட்டைக் குடில்களுக்கும்
விடிந்திட
ஒளவையைப் போல்
நீடுழி வாழ்ந்திட
ஒளடதமாய் நோய் நொடிகளை விரட்டிட
அஃதே அகர
வரிசையில் கவிதையினை
படைத்தேன்....
அன்போடு வந்துவிடு...
ஆரவாரம் தந்துவிடு ....
கருணையை பொழிந்து விடு....
களியாட்டங்களைக்
கண்டு விடு....
களிப்புற செய்துவிடு....
கனிவான பயணத்தை
தொடக்கிவிடு....
சிறப்புடன் வந்துவிடு
சித்திரை மகளே.....
தமிழ் மகளே வந்துவிடு....
தரணியை வளம் பெற
செய்து விடு...!
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}