- டிலாணி ஸ்ரீதரன்
அகம் மகிழ்ந்திட
அழிவுகளை நீக்கிட
ஆனந்தம் பெருகிட
ஆணவம் அழித்திட
இன்பத்தை கூட்டிட
இன்னல்களை களைத்திட
ஈருலகம் போற்றிட
ஈனச்செயல்களை
பொசுக்கிட

உறவுகளை சேர்த்திட
உறங்கி கிடப்போரை எழுப்பிட
ஊக்கமதை தந்திட
ஊனமென்ற எண்ணத்தை
ஒழித்திட
எண்ணங்களை வண்ணங்களாக்கிட
எதிரிகளில்லாத உலகமாக்கிட
ஏக்கங்களை நிறைவேற்றிட
ஏழ்மை நிலையை
அகற்றிட
ஐங்குரவரும் வாழ்த்திட
ஐயத்தை தளர்த்திட
ஒற்றுமையை பலமாக்கிட
ஒரு மனதாக
வேற்றுமை
மறந்திட
ஓங்கியே புகழ் பரவிட
ஓட்டைக் குடில்களுக்கும்
விடிந்திட
ஒளவையைப் போல்
நீடுழி வாழ்ந்திட
ஒளடதமாய் நோய் நொடிகளை விரட்டிட
அஃதே அகர
வரிசையில் கவிதையினை
படைத்தேன்....
அன்போடு வந்துவிடு...
ஆரவாரம் தந்துவிடு ....
கருணையை பொழிந்து விடு....
களியாட்டங்களைக்
கண்டு விடு....
களிப்புற செய்துவிடு....
கனிவான பயணத்தை
தொடக்கிவிடு....
சிறப்புடன் வந்துவிடு
சித்திரை மகளே.....
தமிழ் மகளே வந்துவிடு....
தரணியை வளம் பெற
செய்து விடு...!
தமிழ்ப் புத்தாண்டு .. பராபவத் தாய் பிறப்பெடுத்தாள் ஆண்டு அறுபதில் அவளும் ஒருதாய்!
புத்தாண்டே வருக, புன்னகையுடன் வாழ்த்திடு, ஒவ்வொருவரின் வாழ்விலும் புது பொலிவை தந்திடு!
உன் குரலில் என் இதயம் இளைப்பாறுகிறது.. அவளின் (ல்) அவன்! (9)
தமிழ்ப் புத்தாண்டில் இதைக் கற்போம்.. பூ கோர்க்கலாம் வாங்க!
Tamil New Year: முத்திரை பதிக்கப் போகும் தமிழ்ப் புத்தாண்டு.. சித்திரை மாத சிறப்புகள்!
கோவிலில் நடந்த கலாட்டா.. விஷாலின் விளையாட்டுகள் 10
சிந்தனைச் சிதறல்.. குறையை குறைவாய்க் காண்போம்.. நிறையை நிறைவாய்க் காண்போம்!
Dr Ambedkar Birth Anniversary: அறிவின் உச்சம் அம்பேத்கரின் சட்டம்!
வசந்த காலமாய் புன்னகை பூத்துக் குலுங்கவே.. சித்திரை மகளே வருக!
{{comments.comment}}