- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
எனக்காக எழுதுவார்!
உலக அரசியல் எழுதுவார்!
உலை அரிசிக்கு
வழி இருக்காது!
காலையிலேயே
கற்பனையில்
கனடா
செல்வார்!
நான் காப்பித்தூள்
கடன் வாங்க
கவலையோடு
எழுந்திருப்பேன்!

அவருடன்
செல்லும்போது
பெயர் என்னவோ
பெரிய பெயர்தான்!
அதை வைத்து
உப்பு புளி
வாங்க
முடியாது!
பட்டிமன்றத்தில்
இவர் பேசினால்
பார் முழுதும்
வாழ்த்துரைக்கும்!
அதை வைத்துப்
பசியாறவோ
பணக்காரராகவோத்
துளியும் முடியாது!
ஜரிகை வேஷ்டியும்
தோள் மேல் துண்டும்
பார்க்க அழகாய்த் தான்
இருப்பார்!
ஆனால் பசி வயிற்றைக்
கிள்ளும் போது
இவர் வறுமையில்
பாரதியும் தோற்றுப் போவார்!
இவர் எழுதாத
பொருள் இல்லை!
எதையும் வாங்க இவர்
கையிலும் பொருள் இல்லை!
வாழ்க எழுத்தாளர்!
நீங்கட்டும் அவர் வறுமை!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி.. மதுரைக் காஞ்சி கூறும் மதுரையின் சிறப்புகள்!
எழுத்தாளர் மனைவி!
உன்னைப் பார்க்காத நாள்களில் நான் என்னை இழந்தேன்!
Tamil Poem: பனித்துளி!
500 ஆண்டு பழமையான சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்.. அருள் தந்து காக்கும் அன்னை!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
{{comments.comment}}