- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
எனக்காக எழுதுவார்!
உலக அரசியல் எழுதுவார்!
உலை அரிசிக்கு
வழி இருக்காது!
காலையிலேயே
கற்பனையில்
கனடா
செல்வார்!
நான் காப்பித்தூள்
கடன் வாங்க
கவலையோடு
எழுந்திருப்பேன்!

அவருடன்
செல்லும்போது
பெயர் என்னவோ
பெரிய பெயர்தான்!
அதை வைத்து
உப்பு புளி
வாங்க
முடியாது!
பட்டிமன்றத்தில்
இவர் பேசினால்
பார் முழுதும்
வாழ்த்துரைக்கும்!
அதை வைத்துப்
பசியாறவோ
பணக்காரராகவோத்
துளியும் முடியாது!
ஜரிகை வேஷ்டியும்
தோள் மேல் துண்டும்
பார்க்க அழகாய்த் தான்
இருப்பார்!
ஆனால் பசி வயிற்றைக்
கிள்ளும் போது
இவர் வறுமையில்
பாரதியும் தோற்றுப் போவார்!
இவர் எழுதாத
பொருள் இல்லை!
எதையும் வாங்க இவர்
கையிலும் பொருள் இல்லை!
வாழ்க எழுத்தாளர்!
நீங்கட்டும் அவர் வறுமை!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}