ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கு.. டெல்லியில்  ‌இயக்குனர் அமீர்.. இன்று விசாரணை!

Apr 02, 2024,12:14 PM IST

டெல்லி:  போதைப்பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேர்  டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி மத்திய  போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி கைலாஷ் பார்க் குடோனில் சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படும் ரசாயன பொருட்களை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் ஆகும். 


இது தொடர்பான விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை  டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் இதில்  மூளையாக செயல்பட்டது திமுகவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். கடத்தப்பட்ட இந்த  போதைப் பொருட்களை இவர் ஆஸ்ரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்ற போது அவர் தலைமறைவானார். விமான நிலையங்களில் தீவிர சோதனையும், லுக் அவுட் நோட்டிஸும் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாபர்  சாதிக் வீட்டில் தொடர் சோதனை நடத்தி அவருடைய வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.





மேலும் அவருக்கு வேறு எந்த அமைப்பினருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த ஆய்வில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்  களமிறங்கினர். இந்த நிலையில், டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அங்கு இவரிடம் தொடர் விசாரணை நடத்திய போது பல தகவல்கள் பெறப்பட்டதாக போலீசார் கூறினார். இதை அடுத்து இவரை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைத்தனர்.


போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில்  இயக்குனர் அமீர் உட்பட மூவர் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி ஆஜராகும் படி டெல்லி போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் அமீர்,அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய மூவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.


என்னை எப்போது அழைத்தாலும் உண்மையை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். இறைவன் மிகப்பெரியவன் என சமீபத்தில் இயக்குனர் அமீர் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்