ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கு.. டெல்லியில்  ‌இயக்குனர் அமீர்.. இன்று விசாரணை!

Apr 02, 2024,12:14 PM IST

டெல்லி:  போதைப்பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேர்  டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி மத்திய  போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி கைலாஷ் பார்க் குடோனில் சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படும் ரசாயன பொருட்களை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் ஆகும். 


இது தொடர்பான விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை  டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் இதில்  மூளையாக செயல்பட்டது திமுகவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். கடத்தப்பட்ட இந்த  போதைப் பொருட்களை இவர் ஆஸ்ரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்ற போது அவர் தலைமறைவானார். விமான நிலையங்களில் தீவிர சோதனையும், லுக் அவுட் நோட்டிஸும் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாபர்  சாதிக் வீட்டில் தொடர் சோதனை நடத்தி அவருடைய வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.





மேலும் அவருக்கு வேறு எந்த அமைப்பினருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த ஆய்வில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்  களமிறங்கினர். இந்த நிலையில், டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அங்கு இவரிடம் தொடர் விசாரணை நடத்திய போது பல தகவல்கள் பெறப்பட்டதாக போலீசார் கூறினார். இதை அடுத்து இவரை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைத்தனர்.


போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில்  இயக்குனர் அமீர் உட்பட மூவர் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி ஆஜராகும் படி டெல்லி போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் அமீர்,அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய மூவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.


என்னை எப்போது அழைத்தாலும் உண்மையை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். இறைவன் மிகப்பெரியவன் என சமீபத்தில் இயக்குனர் அமீர் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்