ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கு.. டெல்லியில்  ‌இயக்குனர் அமீர்.. இன்று விசாரணை!

Apr 02, 2024,12:14 PM IST

டெல்லி:  போதைப்பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேர்  டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி மத்திய  போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி கைலாஷ் பார்க் குடோனில் சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படும் ரசாயன பொருட்களை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் ஆகும். 


இது தொடர்பான விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை  டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் இதில்  மூளையாக செயல்பட்டது திமுகவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். கடத்தப்பட்ட இந்த  போதைப் பொருட்களை இவர் ஆஸ்ரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்ற போது அவர் தலைமறைவானார். விமான நிலையங்களில் தீவிர சோதனையும், லுக் அவுட் நோட்டிஸும் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாபர்  சாதிக் வீட்டில் தொடர் சோதனை நடத்தி அவருடைய வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.





மேலும் அவருக்கு வேறு எந்த அமைப்பினருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த ஆய்வில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்  களமிறங்கினர். இந்த நிலையில், டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அங்கு இவரிடம் தொடர் விசாரணை நடத்திய போது பல தகவல்கள் பெறப்பட்டதாக போலீசார் கூறினார். இதை அடுத்து இவரை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைத்தனர்.


போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில்  இயக்குனர் அமீர் உட்பட மூவர் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி ஆஜராகும் படி டெல்லி போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் அமீர்,அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய மூவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.


என்னை எப்போது அழைத்தாலும் உண்மையை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். இறைவன் மிகப்பெரியவன் என சமீபத்தில் இயக்குனர் அமீர் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்