சென்னை: இயக்குநர் அமீருக்கு ஆதரவாக மூத்த இயக்குநர் பாரதிராஜாவும் களம் குதித்திருப்பதால் பிரச்சினை சூடு பிடித்துள்ளது.
இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஞானவேல்ராஜாவுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இயக்குநர்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையில் இதுவரை தயாரிப்பாளர் சங்கம் வாயே திறக்காமல் மெளனம் காத்து வருகிறது. அதேபோல பருத்தி வீரன் படம் தொடர்பான நடிகர் கார்த்தியோ, சூர்யாவோ, அவர்களது தந்தையான சிவக்குமாரோ கூட எதுவும் பேசாமல் உள்ளனர்.
இந்த நிலையில் மூத்த இயக்குநர் பாரதிராஜா, ஞானவேல்ராஜாவைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:
ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொளியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதாரப் பிரச்சினை சார்ந்தது மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும் பெயருக்கும் படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் ரெண்டு படம் இயக்கி அதில் ஒன்றை தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.
ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக் கொண்டே தான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும் அவர் நேர்மையும் இழிவு படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் பாரதிராஜா.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}