பெரியார் குறித்து சீமான் பேசியதில் என்ன தவறு வெற்றி மாறன்?.. இயக்குநர் பேரரசு கேள்வி

Jan 30, 2025,08:35 PM IST

சென்னை: தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று இயக்குநர் வெற்றிமாறனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பேரரசு.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி இருந்தார். அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் புகார் கொடுக்கப்பட்டது. 


இந்த புகாரின் அடிப்படையில் சீமானின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தமிழக அரசியலில்  கடுமையான விவாதங்களை உருவாக்கியது. பல்வேறு தரப்பினர்களும் சீமானின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். 




 சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார் என இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெற்றிமாறனுக்கு இயக்குனர் பேரரசு பதில் அளிக்கும் விதத்தில் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


மதிப்பிற்குரிய வெற்றிமாறன் அவர்களே!

சீமான் அவர்கள் 

பெரியாருக்கு எதிராக பேசவில்லை 

பெரியார் பேசியதை சொல்கிறார்!

அவரைப் பற்றி அவதூறு பரப்பவில்லை,

அவரைப் பற்றிய உண்மையை சொல்கிறார்.

சீமான் அவர்கள் சொல்வது பொய்யென்றால்

அவர் சொல்வது பொய்யென்று சொல்லுங்கள்!

பொய்யென்று நிரூபியுங்கள்!

தமிழ் மொழியைப் பற்றி பெரியார் இப்படி எல்லாம் இழிவாக பேசவில்லை என்று சொல்லுங்கள்.

பெண்களின் உறவுகள் பற்றி இப்படி எல்லாம் பெரியார் அசிங்கமாக பேசவில்லை என்று சொல்லுங்கள்.

அது இருக்கட்டும் 

சீமான் அவர்கள் பெரியாரைப் பற்றி எத்தனை விஷயங்களை பொதுவெளியில் வைக்கிறார்.

ஏன் வீரமணி அவர்களும் சுப.வீரபாண்டியன் அவர்களும் பதில் கூறாமல் பதுங்கி இருக்கிறார்.

பதில் கூற கடமைப்பட்டிருக்கும் திரு வீரமணி அவர்களே அமைதியாக இருக்கும் பொழுது நாம் ஏன் இதை பற்றி பேச வேண்டும்?


சீமான் பேசுவது அரசியல் ஆபத்து அல்ல,  பெரியாரை வைத்து பொழப்பு நடத்தும் சில அமைப்புகளுக்கும், சில கட்சிகளுக்கும்தான் ஆபத்து என்று தெரிவித்துள்ளார் பேரரசு.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

சட்டவிரோதமாக அமெரிக்காவில்.. குடியேறியுள்ள இந்தியர்களை.. திரும்பப் பெற தயார்.. பிரதமர் மோடி உறுதி

news

தவெக தலைவர் விஜய்க்கு.. ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

news

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி.. பிப்ரவரி 20ல் முழக்கப் போராட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!

news

சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்

news

மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!

news

ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு

news

இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்