சென்னை: அரசியல்வாதி நடிக்க வந்தால் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. எல்லோரையும் எல்லா காலகட்டத்திலும் கூத்தாடிகள் எனத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூத்தாடி தான் நாட்டுக்கு நல்லது சொல்கிறான். கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான். அரசியல்வாதியை விட சினிமாக்காரன் எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார் இயக்குநர் பேரரசு.
எக்ஸ்டிரீம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு தெரிவித்தார் பேரரசு. இயக்குநர் பேரரசு பேசியதாவது:

இயக்குநர் படத்தை மிகக் குறைந்த காலத்தில் எடுத்ததாகக் கூறினார். இந்த காலகட்டத்தில் ஒரு படத்தை மிக அழகாக பிளான் செய்து, மிக சிக்கனமாக எடுப்பது தான் மிகச்சிறந்த இயக்குநருக்கான திறமை. இவர்கள் அதைத் திறம்படச் செய்து நல்ல படத்தைத் தந்துள்ளார்கள்.
ரக்ஷிதா கண் பயங்கர ஈர்ப்பாக இருப்பதாகச் சொன்னார் ஆர் வி உதயகுமார் சார், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ரக்ஷிதா நன்றாகவும் நடித்துள்ளார். பெண்களுக்கான நல்ல விசயத்தைச் சொல்லும் படமாக இப்படம் வந்துள்ளது. சினிமா தான் நம் நாட்டில் உயர்ந்த விசயம், பெண்ணிற்குப் பாதுகாப்பை, குடியின் தீமையை, அம்மா அப்பா பாசத்தை என பல நல்ல விசயங்களை, சினிமா தான் சொல்கிறது.
அரசியல்வாதி நடிக்க வந்தால் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. எல்லோரையும் எல்லா காலகட்டத்திலும் கூத்தாடிகள் எனத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூத்தாடி தான் நாட்டுக்கு நல்லது சொல்கிறான்.
கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான். ஜாதியைப் பேசுவது எப்படி தவறோ?, அது போல் கூத்தாடியை இழிவாகப் பேசுவது தவறு தான். அரசியல்வாதியை விட சினிமாக்காரன் எவ்வளவோ மேல். ஒரு நல்ல விசயத்தைப் பேசும் இப்படத்தை ஆதரியுங்கள் நன்றி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மழைக்கால கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டு வர திட்டம்
மீனவர்களின் கண்ணீர் பயணம்!
ஆடி மாதம் வந்தாச்சு.. அம்மன் அருளும் தந்தாச்சு.. ஆடி மாத சிறப்புகள்!
பேராசிரியர் அய்க்கண்- வசந்தா நினைவு சிறுகதை போட்டி.. இரா. கலைச்செல்விக்கு முதல் பரிசு
Santhi Sinnathambi poem: வழிமேல் விழி வைத்து!
Miss உங்களுக்குத் தான் பூ கொண்டு வந்திருக்கேன்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
ஓர் இரும்பு கூழானது!
Short Story: கன்னிகாஸ்திரி !
Tamil Poem: பணமும் மனிதமும்!
{{comments.comment}}