சென்னை: பொன்முடி, சாமிநாதன் இருவரையும் திமுக துணை பொதுச்செயலர்களாக நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை திமுக தொடங்கி செயல்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது திமுக துணைப்பொதுசெயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க. பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா என 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது பொன்முடி, சாமிநாதனை சேர்த்து எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொன்முடி துணை பொதுச்செயலாளராக செயல்பட்டவர். தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்தனர். பல்வேறு சர்ச்சைகளால் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். பொன்முடி தற்போது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

அதேபோல் மு.பெ.சாமிநாதன் தற்போது செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார். இவர் ஈரோடு மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார்.
இது குறித்து திமுக தலமைக் கழக பதவி நியமன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகிய இருவருக்கும் தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது துணைப் பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வந்த திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் ப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்ததாக, வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என்று இரண்டு மாவட்டக் கழகங்களாக திமுக பிரித்துள்ளது. இதையடுத்து வேலூர் தெற்கு (வேலூர் அணைக்கட்டு, குடியாத்தம்) மாவட்ட செயலாளராக ஏ.பி.நந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் வடக்கு (காட்பாடி, கீழ்வைத்தியாணான்குப்பம்) மாவட்டசெயலாலராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}