தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்தி.. அறிவுச் சூரியனாய் வந்துதித்த கலைஞர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jun 03, 2025,10:37 AM IST

சென்னை: தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என்று மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மறைந்த தலைவர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்ரனர். அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல் வருவதால் படு உற்சாகமாக இந்த பிறந்த நாளை எதிர்கொண்டுள்ளது திமுக. தேர்தல் பணிகளின் தொடக்கமாகவும் இந்த பிறந்த நாளை பயன்படுத்துகிறது திமுக.


மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்திலும் கருணாநிதிக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல கருணாநிதி பிறந்த நாளையொட்டி 102 கூட்டங்கள் நடத்தவும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.


இந்த நிலையில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் மெரீனா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். 




முன்னதாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!


ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.


தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் பிறந்த நாளை திமுகவினர் பல்வேறு நிகழ்வுகளுடன் தடபுடலாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்