சென்னை: தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என்று மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த தலைவர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்ரனர். அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல் வருவதால் படு உற்சாகமாக இந்த பிறந்த நாளை எதிர்கொண்டுள்ளது திமுக. தேர்தல் பணிகளின் தொடக்கமாகவும் இந்த பிறந்த நாளை பயன்படுத்துகிறது திமுக.
மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்திலும் கருணாநிதிக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல கருணாநிதி பிறந்த நாளையொட்டி 102 கூட்டங்கள் நடத்தவும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் மெரீனா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் பிறந்த நாளை திமுகவினர் பல்வேறு நிகழ்வுகளுடன் தடபுடலாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
துயரத்தில் முடிந்த RCB ரசிகர்களின் கொண்டாட்டம்.. பெங்களூரில் பரபரப்பு.. நெரிசலில் 11 பேர் பலி
எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி: நடிகர் கமல்ஹாசன் உருக்கம்
உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி...3 வயது சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு!
Thuglife: தக் லைஃப் திரைப்படம்...9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான அறிவிப்பு..திரும்பப் பெறுக..குடியரசுத் தலைவருக்கு சுவெங்கடேசன் கடிதம்
வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் டென்ஷன் ஆகாமல் கூலாக இருக்கும் 7 ராசிக்காரர்கள்
என்னது.. ஐபிஎல் 2025 பைனலில் அனுஷ்கா அணிந்து வந்த ஜீன்ஸ் விலை ரூ.27,000 ஆ?
வட்டச்செயலாளருடன் பேசுவது ஒரு தவறா?. அண்ணாமலை கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!
Rain rain come again.. மே மாதத்தில் இந்தியாவில் மழை அளவு 125 சதவீதம் அதிகரிப்பு!
{{comments.comment}}