டெல்லி: டாக்டர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இதில் கடந்த செவ்வாய்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது, அம்பேத்கர் குறித்துக் குறிப்பிட்டிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. அவரது பேச்சு அம்பேத்கரை இழிவுபடுத்துவதாக உள்ளதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் குதித்தனர்.

நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலுமாக போராட்டம் தொடர்கிறது. நேற்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக வந்தபோது பாஜகவிற்கும் காங்கிரஸ்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரண்டு பாஜக எம்பிகள் தலையில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக பாஜக எம்பிக்கள் கொடுத்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது காந்தி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அம்பேத்கரை இழிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்டு, பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அமித் ஷாவிற்கு எதிராக திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
நாகை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் அமித் ஷாவின் உருவ பொம்மையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சிவகாசியில் அம்பேத்கருக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 1ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Greyshark.. பார்க்க அப்படியே பென்குவின் மாதிரியே இருக்கும்.. ஆனால் மேட்டரே வேறப்பா!
கண் பார்வை அற்றோரின் நேசம் நிஜம்
தமிழகம் பற்றிய கவர்னரின் கருத்து...மிக கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
TET தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
கோடியில் கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?: அன்புமணி ராமதாஸ்
மாவீரன் பொல்லான் சிலை.. திறந்து வைத்து புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரிதிலும் அரிதான சென்யார் புயல்.. இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது!
2 கைகள் கூப்பிய குறியீடு.. திருப்பிய பிரதமர் மோடி.. ராமர் கோவிலில் அரங்கேறிய புதிய டெக்னாலஜி!
{{comments.comment}}