அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சு.. இன்றும் நாடாளுமன்றத்தில் போராட்டம், அமளி.. ஒத்திவைப்பு!

Dec 20, 2024,06:39 PM IST

டெல்லி: டாக்டர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டது.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இதில் கடந்த செவ்வாய்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது, அம்பேத்கர் குறித்துக் குறிப்பிட்டிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. அவரது பேச்சு அம்பேத்கரை இழிவுபடுத்துவதாக உள்ளதாக கூறி காங்கிரஸ், திமுக  உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் குதித்தனர்.




நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலுமாக போராட்டம் தொடர்கிறது. நேற்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக வந்தபோது பாஜகவிற்கும் காங்கிரஸ்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரண்டு பாஜக எம்பிகள் தலையில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக பாஜக எம்பிக்கள் கொடுத்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது காந்தி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 


இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.  அம்பேத்கரை இழிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்டு, பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில்  நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அமித் ஷாவிற்கு எதிராக திமுகவினர் கோஷம் எழுப்பினர்.


நாகை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் அமித் ஷாவின் உருவ பொம்மையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சிவகாசியில் அம்பேத்கருக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்