சென்னை: லோக்சபா தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக வார் ரூமை அமைத்துள்ளது திமுக. மொத்தம் 51 பேர் இந்த வார் ரூமில் இடம் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில் திமுக வார் ரூம்களை அமைத்துள்ளது. தொகுதிப் பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு பூத் கமிட்டி மேலாண்மை, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை கட்சியின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை கவனிப்பார்.
ஊடக விவாதக் குழு மேலாண்மை, நட்சத்திரப் பேச்சாளர்கள் மேலாண்மை ஆகியவற்றை துணை அமைப்புச்செயலாளர் எஸ். ஆஸ்டின் பார்த்துக் கொள்வார். சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி வசம் ஒப்படைக்கப்படுகிறது.

தலைமைத் தேர்தல் குழு தேர்தல் பணி வழக்கறிஞர்கள் குழுவையும் திமுக அறிவித்துள்ளது.
தேர்தல் வழக்குகளுக்கான நீதிமன்ற குழு - வழக்கறிஞர்கள் ஆர். சண்முகசுந்தரம், ஆர் விடுதலை, பி வில்சன்.
தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்களாக துறைமுகம் காஜா, பூச்சி முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் கோரிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளுக்கான குழுவில் வழக்கறிஞர்கள் ஆ சரவணன், ஜே பச்சையப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காவல் துறை புகார்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவில் வழக்கறிஞர்கள் அஸ்வின் பிரசன்னா, அர்ஜுன் இடம் பெற்றுள்ளனர்.
மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் குழுவில் வழக்கறிஞர்கள் இ பரந்தாமன், கே எஸ் ரவிச்சந்திரன், கரூர் மணிராஜ், ஈரோடு ராதாகிருஷ்ணன், கே சந்துரு, சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர 33 வழக்கறிஞர்களும் வார் ரூமில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தையும் கவனித்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக வார் ரூம் அலுவலகத்திற்கான தொடர்பு எண்ணாக 08069446900 அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்
அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!
அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!
ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!
ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!
விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!
{{comments.comment}}