வீட்ல யாருமே இல்லை.. எதுக்கு ரெய்டுன்னும் தெரியலை.. ED சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன்

Jan 03, 2025,06:55 PM IST

வேலூர்: திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வாளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. அதேபோல் துரைமுருகன் மகனும், திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.


கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார்‌. அந்த சமயத்தில், துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்‌. இதில் கணக்கில் வராத 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கதிர் ஆனந்த் ஆதரவாளரான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போதும் 11 கோடி ரூபாய் பணம் பதுக்கியிருந்தது தெரிய வந்தது. 




இதையடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய 11 கோடி ரூபாய் பணத்தை பதுங்கி வைத்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில்தான் வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டுக்கு இன்று காலை 8 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் சென்னையிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள்  வந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. எம் பி கதிர் ஆனந்த் வீடு மற்றும் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் இன்று காலை முதல்  50க்கும் மேற்பட்ட அமலாக்க துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாகவே சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனைத் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.


சோதனை குறித்து சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களோடு துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அங்கு வீட்டில் யாரும் இல்லை. உங்களுக்கு தெரிந்த அளவுக்குத்தான் எனக்கும் தகவல் தெரியம். எதற்காக சோதனை என்று தெரியவில்லை. விவரம் தெரிந்தவுடன் பேசுகிறேன் என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்