2019ல் இந்தியாவின் 3வது பெரிய கட்சி.. 2024ல் 5வது இடம்.. புதிய லோக்சபாவில் திமுகவின் ஸ்டேட்டஸ்!

Jun 04, 2024,06:46 PM IST

சென்னை: 2019 லோக்சபா தேர்தலின்போது இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சியாக உருவெடுத்திருந்த திமுக இந்த முறை 5வது இடத்திற்கு இறங்கியுள்ளது.


கடந்த முறை சோபிக்கத் தவறிய சமாஜ்வாடி கட்சி, திரினமூல் காங்கிரஸ் ஆகியவை இந்த முறை திமுகவை விட அதிக அளவில் சீட் வாங்கியதால் திமுக 3வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு இறங்கி வந்து விட்டது. அதேசமயம், 3 கட்சிகளுமே ஒரே கூட்டணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.


2019 தேர்தலில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் இக்கூட்டணிக்கு தமிழ்நாட்டில் 38 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதில் திமுகவுக்கு 24 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதில் சில வேற்று கட்சி வேட்பாளர்கள் உதயசூரின் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டதால் இவர்களும் திமுக உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். 




கடந்த நாடாளுமன்றத்தில் 303 உறுப்பினர்களுடன் பாஜக பெரும்பான்மை பலத்துடன் முதலிடத்தில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 52 எம்.பிக்களைக் கொண்டிருந்தது. 3வது இடத்தில் திமுக இருந்தது. அதற்கு அடுத்த இடங்களில் திரினமூல் காங்கிரஸ் (22), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (22), , சிவசேனா (18), ஐக்கிய ஜனதாதளம் (16), பிஜூ ஜனதாதளம் (12),  பகுஜன் சமாஜ் கட்சி (10) ஆகிய கட்சிகள் இருந்தன.


உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடிக் கட்சிக்கு 2019 தேர்தலில் வெறும் 5 எம்.பிக்களே கிடைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 லோக்சபா தேர்தலில் இந்த எண்ணிக்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


பாஜக 241 தொகுதிகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 98, சமாஜ்வாடிக் கட்சி இந்த முறை 37 தொகுதிகளை அள்ளியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் திரினமூல் காங்கிரஸ் 29 இடங்களுடன் இருக்கிறது. இதைத் தொடர்ந்து திமுக 22 தொகுதிகளுடன் 5வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளிலேயே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்