சென்னை: பொய் பிரசாரத்தின் மூலமாக வாக்குகளை பெற்று விடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் ஒரு பிரதமர் பிரச்சாரம் செய்துள்ளார் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைதி பூங்காவாக இன்று வடமாநிலத்தவர்கள் பலரும் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பீகார் மக்களுக்கு ஒழுங்காக வேலை கொடுக்காமல், காப்பாற்றத் தவறியதற்கு எங்கள் மீது பழிபோடுவதா? தமிழ்நாட்டு முதலமைச்சர் மீது பிரதமருக்கு தனிப்பட்ட கோபம். நம்மால் செய்ய முடியாததை ஒரு மாநில முதலமைச்சர் செய்து இந்தியா முழுவதும் பேமஸ் ஆகி விடுகிறாரே என பொறாமை.
பொய் பிரசாரத்தின் மூலமாக வாக்குகளை பெற்று விடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் ஒரு பிரதமர் பிரச்சாரம் செய்துள்ளார். ஒருமை பாட்டை பாதுகாக்க வேண்டியவர். பிளவுகளை சரிசெய்ய வேண்டியவர் பிரதமர். சாதியின் பெயராலோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மாநிலம் வாரியாகவோ பிரச்சினைகளை பேசுகின்ற குறுகிய மனப்பான்மை தமிழகத்தில் இருக்கின்ற எந்த கட்சிக்குயிலும் உள்ள கவுன்சிலர்களுக்கு கூட வராத எண்ணம் இன்று பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது. இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் ஆங்காங்கே இப்படி பல பொய்களை சொல்வது மோடிக்கு கை வந்த கலை.

அமித்ஷா சொன்னார் இங்கே வி.கே. பாண்டியன் என்ற தமிழர் தான் ஆட்சி புரிகிறார். ஒடிசாவில் இருக்கும் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா மானம் இல்லையா. ஒரு தமிழ்நாட்டு காரன் ஆள வேண்டுமா என்று கேட்டவர் அமித்ஷாதான் என்பதை இந்த நாடு மறந்துவிடாது. மோடியும், அமித்ஷாவும் பொய் சொல்வதில் வல்லவர்கள். இதே போல தான் ஒடிசாவில் தேர்தல் வந்தபோது, தமிழர்களை எல்லாம் திருடர்களை போல சித்தரித்து பேசியிருந்தார்.
மோடிக்கு நான் சவால் விட்டு கேட்கிறேன் தமிழ்நாட்டில் எங்காவது பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதற்குரிய ஆதாரம் இருந்தால் அவர் வழக்கு போடட்டும்அல்லது எந்தவித நடவடிக்கையும் எடுக்கட்டும். இதேபோல் தான் 2023 ம் ஆண்டு ஒரு புரளியை பரப்பினார்கள்.பீகார் மாநில மக்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது உண்மையா என அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் அவர் மாநிலத்தை சார்ந்தவர்கள் கொண்ட குழுவை அனுப்பி தமிழகத்தில் ஆய்வு செய்தார். ஆய்வு செய்து அவர்கள் தந்த அறிக்கையை மோடி படித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பீகாரிகள் நிம்மதியாகவும், சிறப்பாகவும் வாழ்கிறார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
என்றும் இளமையுடன்...:!
எது எப்படி இருப்பினும்.. நீ வேண்டும்.. I really need you!
மாபெரும் சொத்து.. கல்வி.. Education – The Greatest Wealth
{{comments.comment}}